(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 பதின்மூன்றாம் பாசுரம் புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும் வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான் கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்! பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே; வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் ! தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ; வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ; கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்; கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் !   பதினான்காம் பாசுரம்…