தொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும்   அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், ஆனி 26, 2047 (10.07.2016) அன்று தொல்காப்பியர் சிலையை நிறுவினோம். சித்திரை மாதச் சித்திரைக் கோள் நாள், முழுமதி நாள், தொல்காப்பியர் பிறந்த நாள் என்பர் புலவர். இந்த ஆண்டு, சித்திரை மாதச் சித்திரைக் கோள்நாளில், சித்திரை 27, 2048 (10.05.2017) புதன்கிழமை காலை 1000 மணிக்குக் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிதலுடன் நிகழ்ச்சி…