(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 22. தொழில் அறிதல் மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே. தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும். தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது. உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம். தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும். தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர். தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர். அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன். உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை…