“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா!   மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மனைவியுமான தோழர் இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” நூல் வெளியீட்டு விழா, சென்னையில்   ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 காலை சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.   1970களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை…