இறந்தது நெல்லை   இற்றதோ மனமே! இறந்தது நெல்லை   இற்றதோ மனமே துறந்தது உடலை    தூயரோ கண்ணன்; சற்றைப் போதில்   சடுதியில் பறித்தாய்! சரிந்தது தமிழே!   சாய்ந்தது சரிதம்! பாவியாம் காலன்   பறித்தான் உயிரை! மேவிய புகழுடை   மேதினிப் புலவ! நெல்லை கண்ணா   நெருநல் இருந்தாய்! புல்லென எண்ணி   நெல்லைப் பறித்தான். அற்புதப் பேச்சினில்   அறிவாம் சுடரைக் கற்பொதும் பிலும்தீச்   சுடர்ஏற் றிடுவாய்! ஒப்பா ரில்லை    மிக்கா ரில்லை. தப்பே…