தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள் – மரு.இராமதாசு தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில்  தமிழில் நடத்த முடியாது என்று த.ந.அ.ப.தேர்வாைணயம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும்  நிலையில்,  இந்த அறிவிப்பு பெரும்  அதிர்ச்சியளிக்கிறது. இரண்டாம் தொகுதித் தேர்வு எழுதும் 6.26 இலட்சம் பேரில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்….