ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று

தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017  மாலை முதல் தை 17, 2048 திங்கள் ,   சனவரி 30, 2017  மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.     இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048   ஞாயிறு சனவரி 29,…

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்!     நண்பர்  நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால்,  இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.   தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…