(திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால்   13.குடி இயல்  அதிகாரம் 101. நன்றி இல் செல்வம்                      பெற்றவர்க்கும், மற்றவர்க்கும்  நன்மையால்                   உற்றதுணை ஆகாத பெரும்செல்வம்   வைத்தான்வாய் சான்ற  பெரும்பொருள், அஃ(து)உண்ணான்,            செத்தான்; செயக்கிடந்த(து)  இல். இடம்நிறைத்த பெரும்பொருளை உண்ணான், எப்பயன் இல்லான்; செத்தான்தான்.   “பொருளான்ஆம் எல்லாம்”என்(று), ஈயா(து), இவறும்,       மருளான்ஆம் மாணாப் பிறப்பு. “செல்வத்தால் எல்லாம் ஆகும்”என, மயங்கும் கருமி, சிறப்புறான்.   ஈட்டம் இவறி, இசைவேண்டா ஆடவர்       தோற்றம், நிலக்குப் பொறை….