நலவாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும், முதலமைச்சர் செல்வி  செயலலிதா நிறைவேற்றி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம், மகப்பேறு உதவித் திட்டம்  முதலான  நல்வாழ்வுத் திட்டங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் தெலங்கானா மாநில  நலவாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில  நலவாழ்வுத்துறை அமைச்சர்  மரு. கே. லட்சுமி தலைமையிலான 18 பேர் அடங்கிய குழுவினர்,  (26.02.16 அன்று) சென்னை வந்தனர். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை…