கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.   அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.   இச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின்…