நல்லாசிரியர் துளசிதாசனுக்கும் நிகரி விருது. மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015 ஒவ்வோர் ஆண்டும் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ‘நிகரி’ என்னும் விருதளித்துச் சிறப்பித்து வருகிறோம். 2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை,  சமயபுரம் எசு.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சி  ஃபெமினா உணவகத்தில்,  ஆவணி 19, 2016 / செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு…