வந்தவாசியில் வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர் வழங்கப்பட்டது. கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015:    வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  எலும்பு முறிவுக் காய்ச்சல் (Dengue fever)பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் நில வேம்புக்கருக்கு (கசாயம்) வழங்கும் விழா வந்தவாசி தேரடியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். சங்க  அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, சங்கப் பொருளாளர் எ.தேவா, கிளை நூலகர்…