(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 26-30 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 31-37 31.கொடுமை யாமனுக் கோதுடை யாரியக் கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்? அடிமை வாழ்வி னகன்று விடுதலை அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே. 32.தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான் தமிழ ரென்னு முணர்வு தலைப்படும் தமிழர் யாரும் தலைக்கொளு வாரரோ. ++ மேவுதல்–விரும்புதல் ++ 33.கோதி லாத குழந்தை குதலையைத் தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்? ஈது நந்தமி ழின்கதை யேயிதை ஓது நாவனு முங்கள்…