(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12) – தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 43. நெடுநீ ரொழித்தல்     421.நெடுநீர் கால நீள விடுதல்; நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்; ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல். மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும். நெடுநீர் குறைபல தருமியல் புடையது. கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது. நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி. கால தாமதம் நாளடைவில் ஒரு…