(சித்திரை 14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     கஎ. செய்வது என்ன என்று ஆராய்வாய்” – தலைவி   பிரிந்த தலைவன் வரவில்லையே என வருந்தினாள் தலைவி. தலைவியின் வருத்தம்கண்ட தோழியும் மிகவும் வருந்தினாள். அத்தோழியை நோக்கித் தலைவி கூறுகின்றாள்.    அன்புள்ள தோழியே! அவர் (தலைவர்) பிரிவேன் என்றார் அன்று கூறிய  மொழி – ஓயாது கூறிய உறுதிமொழி – “நின்னை விட்டுப் பிரியேன்;…