பயனில்லாரைத் தெரிவது தொல்லை! ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்; ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்! ஊழல் இல்லா ஆட்சி என்பார்; ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்! வாழ வைக்கும் தலைவரும் இல்லை; வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை! பாழாய்ப் போனது தேர்தல் இல்லை; பயனில்லாரைத் தெரிவதே தொல்லை! -கெர்சோம் செல்லையா