(திருத்தமிழ்ப்பாவை – பாசுரங்கள் 1 & 2 :தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 3&4    மூன்றாம் பாசுரம் தமிழின் உடலும் உயிரும் ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத் தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து; தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச் செய்தவுயிர்; மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்! நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்! ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்; ஆங்காலம் தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்! நான்காம் பாசுரம் சங்கம் வளர்த்த மொழி வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர் வெல்வார் செருக்களத்து…