பாடுங்கள் மக்கள் பாடுங்கள்-நறும் பைந்தமிழ்ப் பாமாலை பாடுங்கள் (பாடு) நாடுங்கள் நற்கவி பாரதியை-நாளும் நாடி நறுந்தமிழ் பாடுங்கள்-புகழ் பாடி அவன்பதம் போற்றுங்கள். (பாடு) வீரம் செறிந்த கவிஞனவன்-தமிழ் வீரம் விளைத்திட்ட வேந்தனவன் ஈரம் படைத்திட்ட நெஞ்சனவன்-அருள் ஈகைக் குணம் சான்ற தூயனவன். (பாடு) சக்தி அருள் பெற்ற சித்தனவன்-கனிச் சாறு பிழிந்தூட்டும் பக்தனவன் தத்துவம் சொன்னநல் முக்தனவன்-துயர் தாங்கும் மனவலி உற்றவனே. (பாடு) விடுதலைப் போர்தனில் சிங்கமவன்-மக்கள் வீறு கொளக்கவி பாடியவன் கொடுமை யழிப்பதில் தீயனையான்-உயர் குன்றென வேபுகழ் கொண்டவனே. (பாடு) சாதி மதங்களைச்…