(திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால்  15.கற்பு இயல்   பிரிவு ஆற்றாமை                             தலைவனது பிரிவைத் தாங்காது. தலைவி வருத்ததை வெளியிடல்              (01-10 தலைவி சொல்லியவை) செல்லாமை உண்டேல், எனக்(கு)உரை; மற்றுநின்       வல்வரவு, வாழ்வார்க்(கு) உரை. பிரியாமை உண்டேல் சொல்லு; பிரிவதை வாழ்வாரிடம் சொல்லு,   இன்கண் உடைத்(து),அவர் பார்வல்; பிரி(வு)அஞ்சும்       புன்கண் உடைத்(து)ஆல், புணர்வு. அவர்பார்வை, இனிது; நீள்கூடலோ, பிரிவு அச்சம் தருகிறது.   அரி(து)அரோ…