பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா? ஆய்ந்துநீ பார் பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய் மண்ணாய் மரமாய் மதி. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப் போராடி வாழ்பவளே பெண். மகளிரைத் தாயுருவில் வைக்காத பேதையை மக்களாய் எண்ணோம் மதித்து. நெருப்பும் பொறுப்புமே பெண்ணாம்; வெறுப்பால் செருப்பாக்கின் சேரும் இழிவு….