பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]