தேனிப் பகுதியில் பேணுகையின்றி இயங்கும் அரசுப்பேருந்துகள்   தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.   சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய…