அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்   விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன்                 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது.                  அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு  இன்றியமையாமையாதது  என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர்.       அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும்  உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம்.  உலகம் சார்ந்தது: அகச்சான்று:                 சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4: பேராசிரியர் வெ.அரங்கராசன்    ஒப்பு நோக்குக:   மன்னுயிரைக் காத்திடத் தம்முயிரை ஈவதற்[கு] என்றும் இருப்பர் சிலர்.                  –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்      2.குடும்பம் சார்ந்தது:                 தாம் அறம் சார்ந்த செயல்களைச் செய்யும்போது துன்பம் வரினும், தம் குடும்பதிற்கு இன்பம் தரும் அச்செயல்களைத்  துணிவோடும் மனஉறுதியோடும் இறுதிவரை முயன்று வெற்றியுடன் செய்து முடித்தல் வேண்டும். அகச் சான்றாக ஒரு குறள்மட்டும்.   அகச்சான்று:        இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்       …

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4: பேராசிரியர் வெ.அரங்கராசன்                துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்;                 இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்! அகச்சான்று:   துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி,       இன்பம் பயக்கும் வினை.                                                   [குறள்.669]   பொருள்கோள் விரிவாக்கம்:                 துன்பம் உற வரினும், துணிவினை ஆற்றி,                 இன்பத்தைப் பயக்கும் வினையைச் செய்க.   பொருள் உரை விரிவாக்கம்:                 ஆராய்ந்து மேற்கொண்ட அறம் சார்ந்த ஒரு செயலினைச் செய்ய முயலும்போது…

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று – 2 ஒப்பு நோக்குப் பகுதி – இலக்கியச் சான்று: யாயும் ஞாயும் யார்ஆ கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.                                              -செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை, 40. பொருள் உரை: என் தாயும் நின் தாயும் ஒருவருக்கு ஒருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? எத்தகைய உறவின் முறையினரும் அல்லர். என் தந்தையும் நின் தந்தையும் எந்த…