கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?   திருகோணமலையில் இயங்கிய கமுக்க முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஓர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கமுக்க இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.  யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆசுட்டுவிச்சு படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர்…