மறப்போமா? பத்து ஆண்டுகள் போனாலும் பழைய நினைவுகள் மாறுமோ மொத்த ஈழத் தமிழினமும் முடிவைத் தேடி ஏங்குகிறோம்!            1   மொத்த உலகும் பார்த்திருக்க முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் கொத்துக் குண்டால் அடிபட்ட கொடூரம் தன்னை மறப்போமா?          2   வாழும் உரிமை வேண்டியன்று வன்னி மண்ணில் தமிழர்கள் ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு ஆட்பட் டழிந்ததை மறப்போமா?               3   முள்ளி வாய்க்கால் அவலத்தை மொத்த ஈழத் தமிழர்க்கும் கொள்ளி வைக்கும் நினைவோடு கொண்டு சென்றதை மறப்போமா?             4   சோகம் நிறைந்த…