திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இலெட்சுமி விலாசு வங்கி மேல்மாடியில் எதிர்வரும் கார்த்திகை 4, 2045- 20.11.2014 அன்று மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன்தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில், விடுதலைப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா, தமிழகத்தில் இரண்டாவது முழு நீளப் புதினமான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் இராசம்(அய்யர்), மணிக்கொடி இதழின் ஆசியரான ‘மணிக்கொடி சிறுகதைகள்’ என்ற நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் திரைப்பட உரையாடலாசிரியருமான பி.எசு.இராமையா, ‘எழுத்து’…