திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுட்பகிரி என்னும் சிற்றூர். வானம் பார்த்த பூமி. இச்சிற்றூரில் உள்ள பள்ளியானது கல்நார் (Asbestos) ஓட்டினால் ஆன கட்டடம். அந்த பள்ளி 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும்; வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் வெப்பம் தகிக்கும். இருப்பினும் இவற்றையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும்…