கி.ஆ.பெ.விசுவநாதம் & சி.இலக்குவனார் பிறந்த நாள் விழா

தமிழியக்கம்வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்இணைந்து வழங்கும்முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவதுபிறந்த நாள் விழா கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணிவே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து. உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது. இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார். கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து…

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21

(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி!                                                                                                               தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345  தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :  இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…

வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் – நிகழ்வு ஞாயிறு நடைபெறுகிறது

பெரியார் நூலக வாசகர் வட்டம்  – 2348 ஆம் நிகழ்வு வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம்  வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு  24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது. தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)  முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  கருத்துரை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்), முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள்…

இனமானப் பேராசிரியர் வாழியவே!

இனமானப் பேராசிரியர் வாழியவே!   பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா  வழியில் அயரா உழைப்பினர் கலைஞர்  போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித் தூய்மை  துணிவு நேர்மை  துலங்கித் தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும் பேராசிரியப் பெருந்தகை வாழ்க! உறவெலாம்  சிறக்க  கிளைஞர் தழைக்க குடிவழி  ஓங்குக    உயர்வுடன்  பொலிக நலமிகு வாழ்வும்…

பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

கார்த்திகை 26, 2048 செவ்வாய்  12.12.2017 மாலை 6.00 கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா தலைவர்:  முனைவர் ஆசைத்தம்பி இராமையா, மலேசியா சிறப்புரை:  முனைவர் மறைமலை இலக்குவனார் திரு அன்பு செயா,ஆத்திரேலியா

உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – மறைமலை இலக்குவனார் அணிந்துரை

உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை     – அணிந்துரை வெல்க தமிழ்!   பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய ‘திருத்தமிழ்ப்பாவை’  உங்கள் கைகளில் தவழ்கிறது.   திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் ‘திருப்பாவை’ எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் ‘திருவெம்பாவை’ எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள்.   இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத்…

மேதகு எசு.ஆர்.நாதன் நினைவேந்தல், சென்னை

சிங்கப்பூர் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு செல்லப்பன் இராமநாதன் நினைவேந்தல்   புரட்டாசி 14, 2047 / செட்டம்பர் 30, 2016 மாலை 5.30 இராயப்பேட்டை முனைவர் ம.நடராசன் இரா.நல்லக்கண்ணு முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் வாசுகி கண்ணப்பன் த.மூர்த்தி அக்கினி அ.இராமநுசம் பெ.கி.பிரபாகரன்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: மறைமலை இலக்குவனாரின் கூட்டிணைப்புத் தொலையுரை

வைகாசி 09, 2047  / 2016  மே  22  ஞாயிறு  இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை (கிழக்கு நேரம்/ET) (கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை         Federation of Tamil Sangams of North America இலக்கியச் சொற்பொழிவு     “மணிப்பிரவாளமும்        தனித்தமிழ் இயக்கமும்”    வழங்குபவர்:   பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்   தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம்கொண்ட தமிழறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணியாற்றிவுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் தமிழ்ப்புலத்தில்…

கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை

மண்ணும் மரபும் – இளைய  தலைமுறையினருக்கு  இனிய  அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   ‘மண்ணின் மணம்’  என்னும் முதற்பகுதியில்  தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில்  தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி  தமிழ்கொலை  புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு  மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.   ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில்  மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…

முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா

  தமிழகப்புலவர்குழு   கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர்  முனைவர் க.  சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது.     பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று  நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின்  107ஆவது  கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது.  சங்க இலக்கியங்களில் அறம், வீரம்,  காதல்,  நட்பு, போன்ற  பல்வேறு தலைப்புகளில்  தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர்.   முனைவர் மறைமலை இலக்குவனார்,  கவிஞர்  பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர். கி. ஆ. பெ.வி. கதிரேசன்  நன்றி நவின்றார். இந்நிகழ்வின் பொழுது . கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் …

தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 :  நன்றியும் பாராட்டும்         தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…