தனித்தமிழ் நூற்றாண்டில் தமிழுக்குச் செய்யவேண்டுவன!     உலகில் மொழிகள் பல பெருவாரியாக வழங்கி, ஆட்சி அதிகாரம் பெற்றுப், பேரரசுகளை அமைத்துப் பெருவரலாறு படைத்திருந்தாலும் இன்று அம்மொழிகள் மக்கள் வழக்கிழந்து, இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன.  அவற்றிடை நெடுங்காலத்திற்கு முன்பே தோன்றியிருந்தும் பல இயற்கைப் பேரிடர்கள் கடல்கோள்களால் இனப்பேரிழப்பை எதிர்கொண்டு தன் வளத்தையும் மக்கள் வழக்கையும் இழக்காது அறிவியல் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்தும் வாழ்ந்து கொண்டுமுள்ள மொழி தமிழ்மொழி.   கழகம் அமைத்துத் தமிழ் வளர்த்தும், ஒரு மொழி வைத்து உலகாண்டும் இருந்த மன்னர்கள்…