தேசத்தின் உயிர், மொழியே!   ஒரு தேசத்திற்கு உயிர் அத்தேசத்தின் மொழியாகும். சுய பாசையைக் கைவிடுவோர் மூடத்தனமாகவோ பைத்தியம் பிடித்தோ தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ள யத்தனித்தால் அரசாங்கச் சட்டத்தின் படி குற்றமாகுமானால் தன்னையும், தன்னுடைய சன சமூகத்தையும் கொல்ல ஆரம்பித்து, தேச மொழி உதாசீனம் செய்பவன் ஆயிரம் மடங்கு அதிக குற்றங்களைப் புரிபவனாகிறான். சுப்பிரமணிய பாரதியார்