வன்மை எனக்குஅருள்வாய் ! அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின் எனை அழைத்திடல் ஏற்றதென நினைத்திடில் உடனே நீ வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல் கழிபேரன்பு கொண்டோர்க்கே என்றனுக்கு உதவிடுவாய் தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே ஏனென்று கேட்பையோ உன்விழைவே சாலச்சிறந்ததுஎன ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் உதவிடுவாய்  ஓ இறைவா அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய் உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும் அச்சத்தினாலன்று என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே  …