வளம் பகிர்வோம் வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே! வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ? வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்; வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து; வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்; எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்; எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம்.  – சுமதி சுடர், பூனா