‘விரல்மொழியர்‘ பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்  அறிமுகம் ​  பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகப்  பார்வையற்றவர்களே   தொடங்கும் ம் முதல் தமிழ் மின்னிதழ்  ‘விரல்மொழியர்’. இம்முயற்சியில்  பங்கேற்க, இம்முயற்சியை ஆதரிக்க பார்வையற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் வரவேற்கிறோம். பார்வையுள்ளவர்களுக்கு இணையாக இன்று பார்வையற்றவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும்  படிப்பு,  பொழுதுபோக்கு அல்லது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்கிற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.   இயல்பிலேயே அதிகமான சிந்தனை ஆற்றலையும் உயர்கல்வியில்  மொழிப்…