திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை
(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும், சினமோ, சீற்றமோ கொள்ளாமை. செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக் காக்கின்என்? காவாக்கால் என்? செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா இடத்தில் அடக்கு; அடக்காமல்போ. செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும் இல்,அதனின் தீய பிற. செல்இடத்தும், செல்லா இடத்தும், சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை. மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்;…