தேனிப் பகுதியில் தொடர்மழையால் விலைகுறைந்த மக்காச்சோளம்

    தேனிப்பகுதியில் தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது.     வானம் மாரி நிலம் என்பதே வானாமாரி எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது.  நாளடைவில் மானவாரி நிலங்கள் என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது வானத்திலிருந்து விழுகின்ற மழைநீரை மட்டும் நேரடி நீர் ஆதாரமாகக் கொண்டு வேளாண்மை செய்யப்படுகின்ற பகுதிகளை மக்கள் வானம் பார்த்த பூமி என அழைக்கின்றனர்.  இவ்வகை மானவாரி நிலங்கள் மேட்டு நிலங்கள், தரைப்பகுதி நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளன. அதாவது  மலைஅடிவாரம், காடுகள் சார்ந்த நிலப்பகுதிகள் கரட்டுக்காடுகள் அல்லது…

தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்

  தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நீர்நிலைகள் கிணறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தும் காய்ந்து கிடந்தன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென சரியத்துவங்கியது. இதனால் பல கிணறுகள் நீரின்றி காய்ந்து போயின. சில கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.   தேவதானப்பட்டி பகுதியில் 10 அடி முதல் 20 அடிவரை தண்ணீர் தாராளமாக கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் ஆழ்துளைக்கிணறுகள் 200 அடிவரை…

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறும் மக்கள்

    தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறி இப்பகுதி மக்கள் செயல்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை உள்ளது. மூலையாறு, தலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரைத்தேக்கி மஞ்சளாறு அணையாகக் கட்டப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் கொள்ளளவு 57 அடியாகும். தற்பொழுது மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் தேவைக்காகவும், பாசனவசதிக்காகவும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் வரத்து அதிகமாக…

வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு பின் வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி     தேனி அருகே உள்ள மேல்மங்கலம், செயமங்கலம் பகுதியில் கூவமாக மாறிய ஆறு தற்பொழுது தண்ணீருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தோடுகிறது. கொடைக்கானல் மலையில் இருந்து வரும் இந்த ஆறு வராகநதி, கேழல் ஆறு, ஏனம் ஆறு, பன்றியாறு என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது. மேற்குமலைத்தொடர்ச்சியில் ஏறத்தாழ 28 அயிரைக்கல்(கி.மீ) தொலவு வரை பாய்ந்து வைகை அணை அருகே உள்ள குள்ளப்புரம் வரை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் குடிக்கவும், ஓடிவிளையாடும்…

மஞ்சளாறு அணை : கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மொத்தம் 13 மடைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று முதல் எட்டுவரையுள்ள மடைகள் தூர்வாரப்பட்டன. அதன்பின்னர் 8 இலிருந்து 13வது வரை உள்ள மடைகள் தூர்வாரப்படவில்லை. இந்த மடையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி ஏறத்தாழ 1,800 காணி நிலம் உள்ளது. இந்த 1,800 காணியில் நெல், பருத்தி, மக்காச்சோளம், கடலை, தட்டப்பயிறு முதலான பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன.. இப்பகுதியில் குறைந்தது 40 நாட்களாது தண்ணீர்…

தேனி மாவட்டத்தில்; தொடர்மழையால் செங்கல் தொழில் பாதிப்பு

தேனிப் பகுதியில் தொடர்மழை காரணமாகச் செங்கல் செய்யும் தொழில் பாதிப்படைந்துள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, இலெட்சுமிபுரம், குன்னூர் முதலான பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலை உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் திருச்சி, கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. செங்கல் தயாரிக்க தனியாகச் சேலம், தருமபுரி பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வந்து செங்கல் தொழிலை நடத்துகின்றனர். மேலும் செங்கல் தொழிலுக்கு மூலதனமாக மண், மணல், விறகு போன்றவை வாங்கி எரிப்பதில் பல விதக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை,…

தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு உழவர்கள் மாறிவருகிறார்கள்.   தேனிப் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்கள் பெரும்பாலும் சோளம்,கம்பு, மணிலா போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த சில வருடங்களாக உரிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டன. அதனால் உழவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடுவது பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது.   தண்ணீர்த்தட்டுப்பாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் உள்ள சூழ்நிலையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உழவர்கள் தங்கள் விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக மாற்றிவிட்டனர்….

தேவதானப்பட்டி பகுதியில் இறக்குமதி செய்யப்படும் இளநீர்கள்

தேவதானப்பட்டி பகுதியில் இளநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தென்னை மரம் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்விளையும் தென்னங்காய்கள் காங்கேயம், மும்பை, கேரளா என ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்பொழுது கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் இப்பகுதியில் தென்னை மரம் பயிரிடலின் பரப்பளவு சுருங்கிவருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் குறைந்ததால் தேங்காய், இளநீர் ஆகியன பெரிதாக இல்லாமல் சிறிய அளவில் இளநீர், தேங்காய்கள் காணப்படுகின்றன. இதனால்…

மழை ஏமாற்றியதால் குறைந்து வரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்

  தேவதானப்பட்டி பகுதியில் மழை ஏமாற்றியதால் மஞ்சளாறு அணை நீர்மட்டம் குறையத்துவங்கியுள்ளது.   கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ச்சியாகக் கனமழை பொழிந்தது. இதனால் தலையாறு, வறட்டாறு, மூலையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகமானது. இதனையொட்டி வறண்டு காணப்பட்ட எலிவால் அருவியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் இருபது அடிக்குக் கீழ் இருந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மளமளவென 40 அடியாக உயர்ந்தது.   இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சாரல்மழை பெய்தது. அப்போது மேகங்கள் திரண்டு இருந்தாலும் காற்று…