திராவிடம் என்பது பிந்தையது – பேரா.சி.இலக்குவனார்

தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது;  திராவிடம் என்பது பிந்தையது.    இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள்.   தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர்.   திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.   கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்  தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது.   திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4   தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார்.   நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி) கரையிடை யிட்ட காட்டா றிரண்டு கலந்தொன் றாகிக் கரைகடந் தோட எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின் குலமுங் குடியும் கொடிய சாதியும் உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும் எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம் இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர் “மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில் உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்” என்றறிந் திருவரும் எவருங்காணா இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர் இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 03 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) இயல் – 2 இலக்குவனார் வரலாறும் கவிதை தோன்றிய சூழலும்   வரலாறு, மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. வரலாறு நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுவதாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்று வரலாறாக மலர்கின்றன. உலக வரலாறு, அரசியல், வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் வரலாறு, மொழி வரலாறு, கவிதை வரலாறு என வரலாறு பல வகைப்படும். தனிமனித வரலாறு உலக வரலாற்றுக்கு உறுதுணையாக…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 தொடர்ச்சி) எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3   வானில் விளங்கா மதியென முகமும் சேலினைப் பழிக்கும் சீர்கரு விழியும் புன்னகை தவழும் மென்செவ் விதழும் முத்தென முறுவலும் மின்னென உருவும் வேய்த்தோள் மீது மிடைந்து சுருண்ட கருங்குழல் தவழும் காட்சியும் மன்றிச் சாதுவை வென்ற சாந்த குணமும் அன்பும் அடக்கமும் அருளும் அறமும் ஒருங்கே கொண்டு ஓரு வாகி யாழினு மினிய இசையுங் கொண்ட முற்றத் துறந்த முனிவரு மிவளை ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2   தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்   புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே;   “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 02 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி) 2  இலக்குவனார் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பியத்தை மட்டுமினறி வேறுசில இலக்கண நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். Tamil language Semanteme and Morpheme in Tamil language A Brief study of Tamil words. ஆகிய நூல்களை எழுதி தமிழ் இலக்கணத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இவை தவிர Dravidian Federation என்னும் ஆங்கிலம் இதழும் KuralNeri என்னும் ஆங்கில இதழும் நடத்தியுள்ளார். ஆய்வு செய்யக் காரணம் இத்தகு சிறப்புடைய…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 01: ம. இராமச்சந்திரன்

    முன்னுரை   செந்தமிழ்ப் பற்றும் சீர்திருத்தக் கொள்கையும் ஒருங்கே பெற்றவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ்ப் புலமையும் தமிழ்த் தொண்டும் வாய்க்கப் பெற்றவர். தமிழ் வளர்ச்சியே தம் உயிர் எனக் கருதி வாழ்ந்தவர். வறுமை வந்து வாட்டியபோதும் செம்மை மனம் உடையவராய்த் திகழ்ந்தார். விருந்தோம்பும் பண்பை அயராது போற்றினார். தவறு கண்டபோது அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர் இவர் என்று கூறலாம்.   அண்ணாவின் நட்பையும் பெரியார் ஈ. வே. ரா.-வின் பகுத்தறியும் பண்பையும் இனிதெனப் போற்றினார். இந்தி…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி   உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில்                 வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5.     எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய                 அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து       தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 5: இலக்குவனார் திருவள்ளுவன்

5         சங்கப் புலவர்கள் வழியில் மட்டுமல்லாமல் சமயக் குரவர்கள் வழியிலும் பாடல்களை இயற்றியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். மாணிக்க வாசகர் இயற்றிய ‘போற்றித் திருவகவல்’ சிவபெருமான் குறித்தது. இதே போல் தமிழ்க்கடல் மறைமலையடிகளை நாடு போற்ற வேண்டும் எனக் கருதிய பேராசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார்.                   “தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி!       தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பவரே போற்றி!       இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி!       தமிழ்நலம் நாடுவார்…

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி – இலக்குவனார் திருவள்ளுவன்

[நட்பு – பதிவு செய்த நாள் : 31/08/2012]                                                     குமரித்தமிழ் வானம் தமிழ்ப்பேரறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002 வாழ்த்துரை –       இலக்குவனார் திருவள்ளுவன் பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி   குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர்…

இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இலக்குவனார் – இரா. இளங்குமரன்

  “தமிழ் மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்” எனும் உயிர்ப்போடு எழுந்தது தமிழ்க் காப்புக் கழகம். “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!” என்னும் நான்மணிகளைச் செயற்படுத்தும் செம்மாப்புடன் நான்மாடக்கூடல் திருநகரில் ஆடி 22, தி.பி. 1993 / 06.08.1962 இல் எழுந்தது தமிழ்ப்பாதுகாப்புக் கழகம். அதன் தலைவரும் நிறுவனரும் பேராசிரியர் சி. இலக்குவனார். . . . .                                …