கவிதைபிற கருவூலம்

உயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி

தலைப்பு-உலகமொழி - thalaippu_ulakamozhi_thamizh

உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே

மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்துத் தவழும்
தூய மழலை தேன் மொழியே

இலக்கணச் செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே

மும்மைச் சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே

இலக்கணப் பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம்!

கவிஞர் ஃகிசாலி  - hishali

– ஃகிசாலி

http://www.eegarai.net/t74296-topic

முத்திரை-ஈகரை - muthirai_eegarai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *