பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி: அதோ பாரடி மயிலே அதோ பாரடி மயிலின் அழகு பாரடி இதோ பாரடி இனிமை இன்னும் பாரடி இருசிட் டிணைதல் பாரடி கொஞ்சம் பாரடி கிளிகள் கொஞ்சல் பாரடி அணிலும் விரைதல் பாரடி …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 அமுதவல்லி – உதாரன், இளவரசி கூண்டுக்கிளையப் பார்த்துப் பாடுகிறாள் இசைப்பாடல் அமுதவல்லி: யாப்பநூல்சொல்ல வந்தார் கிளியே- என்றன் காப்புடைத்துக் காவல் கொண்டார் கிளியே கிளியே வாய்ப்பான நேர மிங்கே கிளியே- வீணில் வதையாக மறையு தந்தோ கிளியே கிளியே விழிகுருடர் என்று …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 சோலை மேடை. ஒருபால் காத்திருக்கும் உதாரன் நிலவைக் கண்டு பாடத் தொடங்கிய வேளை, அமுதவல்லி மறுபுறம் வந்து வியந்து நிற்கிறாள் எண்சீர் விருத்தம் உதாரன் : நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக் கோலமுழு துங்காட்டி விட்டால்காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 தொடர்ச்சி) அரண்மனை – அந்தப்புரம் பூஞ்சோலை இளவரசி அமைதியாக வீற்றிருக்க, தோழியர் வந்து சூழ்ந்து நகையாடலாக உரையாடுகின்றனர். அறுசீர் விருத்தம் தோழி 1 : தங்கநீர் ஓடை தன்னில் தறுகண் முதலை ஏறி எங்குளான் பகைவன் என்றே இளவீரன் செல்லும் பான்மை பொங்கிடும் ஒளிவெள் ளத்தில் புலப்படும் மேகக் காட்சி அங்குறும் மேற்கு வானில் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் உதாரன் : கார்நிரம்பும் வான மெல்லாம் கனமழை பொழிய வெள்ள நீர்நிரம்பும் வயல்க ளெல்லாம் நெடும்பயிர் செழிக்க வண்ணத் தேர்நிரம்பும் வீதி யெல்லாம் திருவிழா மலிய நாளும் பேர்நிரம்பும் ஆட்சி மேவும் பெருவேந் தன்நங் காய்நீ கற்றறிந்த …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம் கன்னித் தமிழின் நிலைகொண்டு குவியும் படியாய் எனதுள்ளம் குறித்தீர் என்றும் என்நன்றி புவியோர் போற்றும் இலக்கியங்கள் பொருந்தும் மரபைச் சொல்வீரேல் கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து கவிதை சுவைத்தல் எளிதாமே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 அமுதவல்லி – உதாரன் கலி விருத்தம் அமுதவல்லி : புண்பட்ட நெஞ்சும் பொலிவுற மாந்தர் பண்பாடுந் தமிழைப் பணிந்து வணங்குவேன் பண்பட்ட திறனாம் புலமை யென்னுங் கண்பெற்ற கவிஞர்க்குக் கனிவான வணக்கம் பதின்சீர் விருத்தம் வெண்பா அரும்பா வீணாம் முயற்சி யென்றே விலகி …
அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக ! – பழ.தமிழாளன்
அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக ! 1. மூத்தமுதற் தமிழ்க்குடியின் முத்தமிழ்த் தாயே ! மூவுலகும் போற்றிடவே முடிபுனைந்த உன்னை நேத்துவந்த ஆரியத்தார் நிலைகுலைத்தல் கண்டும் நீருறக்கம் கொள்ளுவது நன்றாமோ சொல்க பாத்திறத்த பைந்தமிழ இனமதனை வீழ்த்திப் பன்மொழியாய்ப் பல்லினமாய்ப் பாரதனில் கண்டும் பூத்திருக்கும் தூக்கமதன் பூவிழியால் கண்டே பகைத்தமிழ ஆரியரைப் பாரைவிட்டே ஓட்டு ! 2. இனத்தமிழ இனமதனை அழிப்பதற்குப் பாரில் எடுபிடியாம் சில்லறையை இணைத்துவைத்தே இன்பக் கனவுகண்டே ஆடுவதைக் களையெடுத்தே ஓட்டல் கதிரொக்கும் …
அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்
அப்படி.. அப்படி! ஆசைகளோடு அலைந்தால் எப்படி? அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி? வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி வசதிகளின்றி குடித்தனம் எப்படி? அசதிகளோடு கிடந்தால் எப்படி? ஆட்டம் விடாது நடந்தால் எப்படி? சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி? சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி? கூடிக் களிக்க மறந்தால் எப்படி? குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி? அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி! வசதிகள் தேடி செய்வாய் அப்படி! கூத்தும் குடியும் விடுவாய் அப்படி குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி.. கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி கற்றாரோடு படிப்பாய்…
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …
தமிழவள்! – மு. இராமச்சந்திரன்
தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…
பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! – பழ.தமிழாளன்
பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! 1. மனுநூலை நம்பவைத்து மக்களையே மடமைதனில் ஆக்கி வைத்த மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத் தோலுரித்த மாண்பின் மிக்கோன் பனுவலெனும் வேதத்தின் முடக்காற்றை மணக்காதே வைத்த பெம்மான் பிறப்பதனில் சாதிகண்டு பரமனுச்சி அமர்ந்திருந்த ஆரி யத்தை நுனிநாவாம் பகுத்தறிவின் அம்பாலும் கோலாலும் வென்ற வீரன் நற்றமிழத் தன்மானம் பகுத்தறிவால் ஆரியத்தை விரட்டி வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின் மூச்சுக்காற் றாக மாறித் …