அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை 35: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி) சங்கப்புலவர்கள்பொன்னுரை– 35:அளவுக்குமீறிக் கொள்ளாதே! ”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்பொன்னுங் கொள்ளார் மன்னர்” நற்றிணை – 226. 1-3; பாலை ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர். சொற்பொருள் மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்; வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு,…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34: ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! : இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள் பாடிய புலவர் – அரிசில் கிழார் பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. காலத்துப் பாடல் துறை:…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33 பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! *** தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து : 22 அடிகள் 5 – 10 (பாடலின் மொத்த…
மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! “சினனே காமம் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் வுடைமை தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து) அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்” பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 22, அடிகள் 1- 4 (பாடலின் மொத்த அடிகள் 38) பெயர் – கயிறுகுறு முகவை (14) துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்…
தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்
தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026 சங்கப் புலவர்கள் பொன்னுரை – 31 தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! ‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை. நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4 நெய்தற் கலி இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பதவுரை: கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;…
வெருளி நோய்கள் 1221-1224 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1221-1224 சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக்…
கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…
ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29 ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக! – நரிவெரூஉத்தலையார் புறநானூறு 5, அடிகள் 6-7 திணை: பாடாண் திணை துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம். சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது. முழுப்பாடல்: எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக…
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:- அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது 60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 : நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! ”நன்றல் காலையும் நட்பிற் கோடார்” கல்லாடனார், அகநானூறு 113. 1. தலைவி கூற்று திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது பொருள் விளக்கம்: நன்று அல் காலையும் நட்பின் கோடார். நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = துயருற்ற பொழுது; நட்பின் கோடார் = நட்பிலிருந்து கோணாதவர்கள் = நட்பை விட்டு…
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 ****** பிறர் நலத்திற்காக வாழ்க! பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணிப் போகிய நற்றிணை 186 : 8-9 பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன். முழுப் பாடல்: கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கிஇரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டுபெருங்கை யானை பிடியெதிர் ஓடும்கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடைவேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5பாண்யாழ்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! “மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ” தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புறநானூறு 190 ஆவது பாடல் பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக்…
