திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன், கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா? மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். அவ்வாறெல்லாம் பொருள் கிடையாது. திரு என்றால் செல்வம், பெருமை எனப் பல பொருள்கள். திரு வளர் என்றால் திரு வளர்ந்த, திரு வளர்கின்ற,…
தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!
இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது! தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். தோழமைக்கட்சியினர் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற பொதுநலத்திற்காகவோ பதவியை எதிர்நோக்கிய தன்னலத்திற்காகவோ த.வெ.க.வினை ஆதரித்துள்ளனர். ஆனால், அதனைத் தீண்டத்தகாத கட்சிபோல் கருதி அவ்வப்பொழுது பொன்மொழி உதிர்க்கின்றனர். ஒருவரைக் காதலித்து விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பின் முந்தைய காதல் தொடருவதாகக் கூறுவது பரத்தமை – விபச்சாரத்திற்கு ஒப்பாகும். ஒருவரிடம் நட்பு கொண்ட பின் மீண்டும் ஆராய்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். அவரே நட்பு…
நவம்பர் முதல் நாள் தமிழரின் துயர நாள்
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். மொழிவாரிநாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடக் கூடாது. ஏனெனில், அன்றைக்குத் தமிழ்நாடு தன் நிலப்பரப்பில் 7000 சதுரப் புதுக்கல் அளவை இழந்தது.கேரளாவின்நிலப்பரப்பு 3800 சதுரப்புதுக்கல்.கிட்டத்தட்ட அதைப்போல் இரு மடங்கு நிலத்தை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாடாக இருந்த பகுதிதான் கேரளாவாக மாறியது. இப்பொழுது மீண்டும் அதைப்போல் இருமடங்கு நிலத்தை நம்மிடம் கூறுபோட்டுப் பிய்த்த நாளை நாம் எங்ஙனம் தமிழ்நாடுநாாளகக் காெ்ணடாடக் கூடும். எனவே, நவம்பர் முதல்நாளைத் தமிழரின் துயர நாளாகப் பின்பற்றுவாம். உழுவல் அன்பின் இலக்குவனார்…
தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக!
தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்குத் தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்ட வேண்டுகிறோம். தமிழ்நாட்டரசு தமிழ்நாட்டுமக்களின் நலன்களைக் காப்பதாக, அம் மக்களுக்குரிய மொழியின் பயன்பாட்டைக் காப்பதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் அதனைத் தாங்கும் கட்சிகளும் துணைநிற்கும் கட்சிகளும் தமிழக நலன்களைப் பேணுவதாகத்தானே இருக்க வேண்டும். கட்சிக்குப் பெயர் சூட்டும் பொழுது திராவிடம் என்று சிதைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் எனப்பெயர் சூட்டிய…
மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா
தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கு விழாவையும் நிகழ்த்தின. தொடக்கத்தில் எழுத்தாளர் மணா எழுதி இயக்கிய உயிருக்குநேர் என்னும் மொழிப்போர் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. நிகழ்விற்குத் தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். செயலர் தமிழ்க்காதலன் இணைப்புரை வழங்கினார். வையைத்தமிழ்ச்சங்கத்தலைவர் புலவர் ந.ந.இளங்குமரன் வரவேற்புரை ஆற்றினார். இளமுனைவர் நெல்லை சோமசுந்தரி விருதாளர்கள் குறித்த உரையை அளித்தார். பேரா.ப.மருதநாயகம்,…
நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்
நீயா நானா முகங்கள் தமிழில் வடமொழிக் கலந்ததால் சேர நாட்டை நாமே இழந்து விட்டோம் இலக்குவனார் திருவள்ளுவனிடம் அசுவின் நேர்காணல்
29.06.2025 நீயா நீனா நிகழ்வில் தலை காட்டுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
வரும் ஆனி 15, 2056 / 29.06.2025 ஞாயிறு நண்பகல் 12.30-2.00 மணி நீயா நீனா நிகழ்வில் நானும் தலை காட்டுகிறேன். மேற்கோள் முதலிய தேவைக்கேற்ப தமிழை ஆங்கிலத்தில் ஒலி பெயர்ப்பு முறையில் எழுதுவது இயற்கையே. ஆனால், தமிழைச் சுருக்கி ஆங்கில எழுத்துகளில் எழுதும் தங்கிலீசு முறையை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் அதற்கு எதிர்ப்பானவர்களை மறு தரப்பாகவும் கொண்டு இந்நிகழ்விற்கான ஒளிப்பதிவு ஏறத்தாழ இரவு 9.00 மணி முதல் மறுநாள் யாமம் 3.00 மணி வரை நடைபெற்றது. நானும், தொண்டினையே புனைபெயராகக் கொண்ட தமிழாசான்,…
திராவிடம்தமிழைக்காக்குதா? அழிக்குதா? – இலக்குவனார் திருவள்ளுவருடன் காரசார விவாதம் | பவா சமத்துவன்
(தொடரும்)
கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்
நேரலை: கலைஞர் பல்கலைக்கழகம்.. பாமக கேட்கலாமா? வன்னியர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் | TNMedia Debate நெறியாளர் – தொகுநர், ஊடகர் சிவசங்கர் உரைஞர்கள் தமிழ்த்தேசச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க் குமரன் மூத்த தமிழறிஞர் இதழாளர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுத்தாளர், மூத்த ஊடகர் பவா சமுத்துவன்
ஆட்சியாளருக்கு அவப்பெயர் உண்டாவது அதிகாரிகளாலேயே | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி |
ஆட்சியாளருக்கு அவப்பெயர் உண்டாவது அதிகாரிகளாலேயே | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி | முற்றம் தொலைக்காட்சி
அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி
கிரந்தப் பயன்பாடு தமிழ்ப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கவே!I இலக்குவனார் திருவள்ளுவன்| விசவனூர் வே.தளபதி
இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை கிரந்தப் பயன்பாடு தமிழ்ப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கவே!
