அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. அறிவியல் அறிமுகச் சொல் இவ்வாறு தனித்தன்மையுடன் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்ட இக்குறட்பாக்கள் மூன்றும் மற்றொரு வியப்பையும் உள்ளடக்கியனவாகும். அதுதான் இக்காலம் வளர்ந்து விரிந்துள்ள அறிவியலின் குறிப்பும் பொருந்தியுள்ளமையாகும். முன்னே கண்ட பக்கம் 25, 26 அறிவியல் விளக்கத்தையும் இக்குறட்பாக்களின் கருத்தேற்றத்தையும் பொருந்திக்காண வாய்ப்புள்ளது. மூன்று குறட்பாக்களும் சொல்லமைப்பிலும், கருத்தமைப்பிலும் பட்டறிவிலும், ஒத்துள்ளமையால் ஒரு குறளைக் கொண்டே பொருத்திக் காணலாம். அவற்றிலும் ”பெறும் அவற்றுள்” (61) என்னும் குறட் கருத்தைப் பொருத்திக்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  11. மனமும் இனமும் செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது: உணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை,…

சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 541. Acquiring Property சொத்தினை அடைதல்   வணிகச்சொத்துகள் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து கை மாறுகின்றன. சொத்து கையகப்படுத்தல் என்பது மனைவணிகச்சொத்தின் மீது உரிமை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கான செயல்முறையைக் குறிப்பது. 542. Acquisition   கையகப்படுத்துதல்   அகப்படுத்தல், கைப்பற்றுகை, கைப்பற்றல், கைக்கொள்ளல், ஈட்டல், திரட்டூக்கம்,  ஊறல், அடைவு, செயல், தேட்டம்,  உழைப்பு, பெற்றி, பேறு, உரிமை,  சேகரம், சம்பாத்தியம், ஈட்டியது, முயன்றடைதல், …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைஇசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாதுவசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;`தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின்…

சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 531. Acquired Company நிறுவனத்தைப் பெறுதல்   ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் மீதான உரிமையை வாங்கிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வணிக நடவடிக்கையாகும். 532. Acquired Evidence சான்றாதாரம் அல்லது சான்றாதாரங்கள் அடைதல்   உண்மையை அல்லது குற்றத்தை மெய்ப்பிப்பதற்காக அடையப்படும் சான்று. 533. Acquired Immunity நோய்மி எதிர் அடைவு   நோய்த் தடுப்பாற்றலைப் பெறுதல்.   நோய்த்தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி நோய்…

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்

(அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ. – தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 3. கருமித்தனமும் சிக்கனமும் பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார். அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே – வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி – குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 521. Acquainted With Handwriting கையெழுத்தை நன்கறிந்திருத்தல் கையெழுத்தைக் கண்டறியும் பழக்கமுள்ள. வழக்குகளில் இடம் பெற்ற சில தொடர்கள்: குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கறிந்த சான்றரால் போலி ஆவணங்களில் உள்ள கையெழுத்து அவருடையது எனக் கண்டறியப்பட்டது. கையெழுத்து வல்லுநர் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கு அறிந்து ஆவணத்திலுள்ள போலி கையெழுத்து அவருடையது என மெய்ப்பித்தார். 522. Acquainted With The Fact Of The Case வழக்கு உண்மை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-61 பிரசங்க சம்மானம் காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன். பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?-தொடரும்) அறிவியல் திருவள்ளுவம் ஆ. திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். ‘பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் ‘பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம். “பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா”[1] என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம். பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  10. இனத்து இயல்பாகும் அறிவு நிலம் பெயராப் பொருள்களாம் மரம், செடி, கொடிகளும், நீர்வாழ்வனவும், பறப்பணவும், நிலத்தில் ஊர்வனவும் நடப்பனவும் ஆகிய அனைத்தும், உயிர் உடைய பொருள்கள் என்ற ஒருமைப்பாட்டால் ஓர் இனம் எனக் கருதப்படினும், அவ்வுயிரினம் அனைத்திலும் மனித இனம் உயர்வுடையது எனக் கருதப்படுவதற்குக் காரணமாய் நிற்பது மனித இனம் பெற்றிருக்கும் பகுத்துணர் அறிவே ஆகும். தக்கனவும், தகாதனவும், ஏற்பனவும் மறுப்பனவும் கலந்தே காட்சி…

சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 511. Acknowledgement of Signature கையொப்ப ஒப்புகை   தொகை பெறுபவர் ஒப்புகை   நிறைவேற்றத்தை ஒப்புக் கொள்வதை உறுதிப்படுத்தும் கையொப்பம்.   கொடுக்கப்பட்ட ஆவணத்தில், குறிப்பிடப்படுபவர் கையொப்பத்தைச் சான்றுறுதியர்(notary)  சரிபார்த்து உறுதிப்படுத்தல். 512. Acknowledgment Of A Right   உரிமை ஒப்புகை   மறு தரப்பாருக்குரிய உரிமையை ஒப்புக் கொள்ளுதல்.     513. Acme முகடு   முடிஉச்சிநிறைவெய்திய நிலை.   கிரேக்க மொழியில்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,                   தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்        105           இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;       இருளும் தொண்டும்           விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;            கழியிருள் அதனுள் கடந்தனன்…

1 2 453