கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…
வெருளி நோய்கள் 801-805: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 796-800: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 801-805 கிறுகிறுப்பு தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கிறுகிறுப்பு வெருளி.நீர்ச்சுழற்சி அல்லது தலை சுற்றல் தொடர்பான பேரச்சத்தையும் குறிக்கும்.இரண்டிற்கும் பொதுவான சுழற்சி அடிப்படையில் முதலில் சுழற்சி வெருளி எனக் குறித்திருந்தேன். நீர்ச்சுழியாகிய நீர்ச்சுழற்சியைப்பார்க்கும் பொழுது தலை கிறு கிறு எனச் சுற்றுவதால் அல்லது தலை சுற்றும் என அஞ்சுவதால் வரும் பேரச்சத்தைத்தான் இது குறிக்கிறது. எனவே சுற்றல் வெருளி என்பதை விட கிறுகிறு வெருளி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனைக் குறித்துள்ளேன்.கிறுகிறுப்பு வரும்…
வெருளி நோய்கள் 796-800: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 791-795 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 796-800 கிறித்துப் பிறப்பு நாள் குறித்த பேரச்சம் கிறித்துநாள் வெருளி. கிறித்துப்பிறப்பு(கிறித்துமசு) கொண்டாட்டங்கள் குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் சிறாருக்கே மிகுதியாக வருகிறது.கிறித்துப் பிறப்பு வெருளி என்றால் கிறித்து பிறந்தது குறித்த பேரச்சம் என்றாகிறது. கிறித்துப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பேரச்சத்தைத்தான் இங்கே குறிக்கிறது. எனவே, சுருக்கமாகக் கிறித்து நாள் என்பது சரியாக இருக்கும்.00 கிறித்துப்பிறப்பு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி.கிறித்து நாள் வெருளி உள்ளவர்களுக்குக் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி வரும் வாய்ப்பு…
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 ****** பிறர் நலத்திற்காக வாழ்க! பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணிப் போகிய நற்றிணை 186 : 8-9 பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன். முழுப் பாடல்: கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கிஇரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டுபெருங்கை யானை பிடியெதிர் ஓடும்கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடைவேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5பாண்யாழ்…
வெருளி நோய்கள் 791-795: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 786-790: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 791-795 கிழக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி. கிழக்கே பயணம் செய்தால், கிழக்குத் திசையில் எதையும் செய்தால் தீமை நிகழும் என்ற பேரச்சம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நாள், சில கோள்களின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்த நாளில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்பது கணிய/சோதிடப் பித்தர்களின் நம்பிக்கை. இந்தியாவில் கணிய(சோதிட)ப் பற்றர்கள், திங்கட் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் கிழக்குத் திசையில் பயணம் செய்ய மாட்டார்கள். இதனைக் ‘கிழக்கே…
வெருளி நோய்கள் 786-790: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 781-785 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 786-790 கிண்ண வெதுப்பம்(muffin) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண வெதுப்ப வெருளி.உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. கிண்ணவெதுப்பன்(The Muffin Man) மழலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட திகில் தொடரில் எதிராளராக வருபவன். சிலர் இதனை அதனடிப்படையில் கிண்ண வெதுப்பன் வெருளி என்கின்றனர்.கிலி வெருளி உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்பன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 கிராண்டு தாம்பசன்(Grant Thompson)என்னும் இளைஞர் மீதான அளவுகடந்த பேரச்சம் கிராண்டு தாம்பசன் வெருளி.நேர்ப்பு மன்னர் வெருளி(The…
குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! – தொடர்ச்சி) சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இரு! சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451) பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும். பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்; பெருமை-பெருமைப் பண்பு; சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும். பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச்…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7 செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு…
வெருளி நோய்கள் 781-785: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0 வெருளி நோய்கள் 781-785) 781. கிச்சிலிச் சாறு வெருளி – Chymoportokaliphobia கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி. Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு. Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு). கிச்சிலிப் பழ வெருளி – Portokaliphobia 00 782. கிடப்பு வெருளி – Adhaesitophobia செயல்பாடின்றிக் கிடப்பில் போடுதல் அல்லது நின்று போதல் தொடர்பான தொடர்பான வரம்பற்ற கிடப்பு வெருளி எனப்படும். Adhaesito…
வெருளி நோய்கள் 776-780: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 771-775: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 776-780 காற்று வீச்சு தொடர்பான அளவுகடந்ததேவையற்ற பேரச்சம் காற்று வெருளி.சிறு பருவத்தில் காற்று, சூறைக்காற்று, சூறாவளிக் காற்று, புயல் காற்று முதலியவற்றால் ஏற்பட்ட ஊறு உள்ளத்தில் ஆழ் மனத்தில் பதிந்து அதனால் காற்று வெருளி உண்டாகிறது. காற்று என்பது கொல்வதற்கு அல்லது அழிப்பதற்கு என்று எண்ணிக் காற்று மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.புயல் வெருளி(Procellaphobia), கடும்புயல் வெருளி(Tempestaphobia), சூறாவளி வெருளி(Lilapsophobia), சூறைக்காற்று வெருளி( Cyclonophobia) முதலானவற்றையும் காண்க.குட காற்று எறிந்த குப்பை, வட பால் (பெரும்பாண் ஆற்றுப்படை…
நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும் அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 12 பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை…
