அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 98. எது அறிவு? நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராகத் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா? நண்பன் :…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 95. மறதி! ஒரு பெரியவர் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லாரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார். இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 92. நண்பனின் ஆலோசனை ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை. “மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 89. சிந்தனை செல்லும் வழி சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் – ‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்கணமும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர். அத்தகைய…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 86. எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டா ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான். அந்தச் சமயத்தில் ஒருநாள், அத் தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன் : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 வணக்கம் ஐயா. வணக்கம். வாங்க, வாங்க! இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம்? ஐயா, உங்கள் புதினத்தின் மையக் கருத்து வளரும் தலைமுறையினர் மூத்த தலைமுறையினரைப் போற்றிப்பேண வேண்டும் என்பதுதானே. ஆமாம். ஆமாம். கூட்டுக் குடும்பமே இல்லாமல் போன இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் நன்மையைக் கருதிச் செயற்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பியரும் ஒரு தங்கையும் உள்ளனர். மேலும், இவர்களின் சித்தியும் இங்கேயே உள்ளார். அவருக்குக்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82 : தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 83. விலையேற்றம் சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் – ஆம், ஆம்,     யானை விலை குதிரை குதிரை விலை மாடுமாட்டின் விலை ஆடுஆடு விலை கோழிகோழி விலை குஞ்சுகுஞ்சு விலை முட்டைமுட்டை விலை கத்தரிக்காய் ஆமாம் விற்கிறது – என்ன செய்வது? என்றேன். அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 பெரிய திரை என்று மட்டுமல்ல. சின்ன திரைக் கலைஞர்களையும் கதைகளில் வருவதுபோல் காட்சிகளை அமைத்து விடுவோம். அது மட்டுமல்ல.ஒரு தொலைக்காட்சித் தொடரையும் மற்றொரு தொடரையும் அல்லது மற்ற இரு தொடர்களையும் இணைத்து ஒன்றாகக் காட்டுவோம். தொலைக்காட்சித் தொடர்களை இணைத்துக் காட்டுவீர்களா? ஆமாம். வெவ்வேறு தொடர்களில் உள்ள கதைமாந்தர்கள் சந்திப்பது போலும் ஏதேனும் சிக்கல்களைச் சேர்ந்து அவிழ்ப்பதுபோலும் உதவிக் கொள்வதுபோலும் கதைகளை அமைப்போம். குடும்பத்தினர் சேர்ந்து விளையாடுவதாகவும் காட்சிகள் வைப்போம். பாட்டுக்குப்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் : உமக்கு என்ன வேலை? சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது. வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா? சாட்சி : ஆம். இருக்கிறது. வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ? சாட்சி : கட்டிடமாக. விக்கீல் : அதன்…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : இலக்குவனார்திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 மறுநாள்: உங்கள் கதைகளில் நீங்கள் விறுவிறுப்பிற்கு என்ன செய்வீர்கள் என்ற தெரிந்து கொள்ளலாமா? கண்டிப்பாகச் சொல்கிறேன். திடீரென்று ஒருவரைப் புகுத்துவோம். ஏன்? எதற்கு அவர் வந்தார் என்று பார்ப்பவர்கள் கருத மாட்டார்களா? அப்படியெல்லாம் இல்லை. மாறாக, அவர் குறித்த பரபரப்பு பார்ப்பவர்களிடம் தொற்றிக் கொள்ளும். முன்பே இறந்த போன ஒருவர் உயிரோடு இருப்பதாகக் காட்டுவோம்.  அடக்கம் செய்யப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட ஒருவர் எப்படி மீண்டு வருவார் எனப் பார்ப்பவர்கள் சிந்திக்க…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி) பூங்கொடி பொதிகைக் காட்சி           தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்;             முடியும் நடுவும் முகிலினம் படர்தரக்     110           கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச் சில்லெனுந் தென்றல் மெல்லென வீச நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப அலரும் மலரும் அடருங் கடறும்              பலவும் குலவி நிலவும் மாமலைக்           காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 77. இரு குரங்கின் கைச்சாறு பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான். ‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது. இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான். அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ!…

1 2 26