குவிகம் இலக்கிய வாசல்,  குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு

குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார் நிகழ்வில் இணைய நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode  ilakkiyam அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 4

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4  காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி :         குடிமக்கள்                         போற்றும்                                       முடிவேந்து                        வாழ்க                              அடிபணிவார்            காக்கும்                                       அருள்வேந்து            வாழிய                              நாட்டின்                            ஒளிவிளக்காம்                                        நங்கை                    இளவரசி                              ஏட்டி                               லெழுதவொணா                                       இன்பமுடன்            வாழியவே அரசன் :         மங்கையீர்                         நீங்கள்                                       மதிக்குந்                           தலைவிதான்                              பங்கமில்                           யாப்பைப்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 3

(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி  :                   அணங்கே                அல்லி           அறியாயோ                                       அரசன்           மகளை          உணராயோ                              இணங்கி                 நாமும்          ஏற்றிட்டோம்                                       இளையாள்              காவல்           பூண்டிட்டோம்                              சுணக்கம்                 அதிலே                   நேர்ந்ததுவோ                                       சூழ்ச்சி          முற்றும்                   அழிந்ததுவோ                              பிணக்கம்                 நம்மில்          வேண்டாது                                       பிழையைத்              தடுத்தல்               வேண்டுமன்றோ அல்லி  :         நமது                      காவல்          …

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 85

(குறிஞ்சி மலர்  84 தொடர்ச்சி) குறிஞ்சி மலர், அத்தியாயம் 30 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று.      — திருவள்ளுவர் மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை;…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84

(குறிஞ்சி மலர்  83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 83

(குறிஞ்சி மலர்  82 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  அத்தியாயம் 29 தொடர்ச்சி “நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியாயிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாவிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலை மேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82

(குறிஞ்சி மலர்  81 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  29 புண்ணிய நல்வினை திரண்டனையபொன்னொளிர் பொலிவினைகண்ணிற்கரந்தானே மறுபடிகண்ணுள் கலந்தானே! விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். ‘உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்’ என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 81

(குறிஞ்சி மலர்  80 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  28 தொடர்ச்சி தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்க முயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த்தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியை தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிருவாகத்தினாலும் நாணயமான நடவடிக்கைகளாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 80

(குறிஞ்சி மலர்  79 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  28 தொடர்ச்சி “இது தொடங்கி எத்தனை நாளாயிற்று முருகானந்தம்?” “நாலு நாளைக்கு முன்னால்தான் திறப்பு விழா எல்லாம் பிரமாதமாகத் தடபுடல் செய்தார்கள். பருமாக்காரர்தான் திறந்து வைத்தார்.” “ஊம்! இனிமேல் இது ஒரு புது வம்பா?” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவாறே அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். முருகானந்தமும் பின் தொடர்ந்தான். அன்று இரவு அரவிந்தனுக்கு உறக்கமே இல்லை. பருமாக்காரரைப் போல் வசதியுள்ளவர்கள் ஒருவர் மேல் பகைமை முற்றி வைரம் பெற்றுவிட்டால் திட்டத்தோடும், தீர்மானத்தோடும், கெடுதல் செய்து விரைவாக…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 79

(குறிஞ்சி மலர்  78 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 ஊரெல்லாம் கூடிஒலிக்க அழுதிட்டுப் பேரினைநீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள்.      — திருமூலர் தன்னைப் பெற்ற தந்தை இறந்தபோது கூட அரவிந்தன் இப்படி அதிர்ந்து அலமந்து கதறியழவில்லை. அப்போது அவன் சிறுவன். இப்போதோ உணர்வுகளில் நோவும் அளவுக்கு மனம் பக்குவப்பட்ட இளைஞன். ‘தன்னை வளர்த்து உருவாக்கி வாழ்வளித்த வள்ளல் இறந்து போய்விட்டார்‘ என்று அந்தத் தந்தியில் படித்தபோது அதை உண்மையாக ஏற்றுக் கொண்டு நம்பி ஒப்புக்கொள்ளவே, அவன்…

குவிகம் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு உரு. 5000/ இரண்டாம் பரிசு உரூ. 3000/ மூன்றாம் பரிசு உரூ. 2000/ கதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 15.12.2022 கதைகள் 700 முதல் 1200 சொற்களில் இருக்க வேண்டும். magazinekuvikam@gmail.com மின்வரிக்குச் சொற்கோப்பாக அனுப்ப வேண்டும். தொடர்பிற்கு – 97910 69435 / பகிரி 944 2525 191 இதழில் வெளியிடப்படும் பிற கதை ஒவ்வொன்றிற்கும் உரூ. 1000/ வழங்கப் பெறும்.

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 78

(குறிஞ்சி மலர்  77 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 27 தொடர்ச்சி “உங்களுடைய உடம்புக்கு என்ன?” “உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனத்துக்குத் தான் எல்லா இழவும்.” அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரசர்) வந்துவிடும் அவருக்கு. “எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக…

1 2 22