கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைஇசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாதுவசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;`தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,                   தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்        105           இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;       இருளும் தொண்டும்           விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;            கழியிருள் அதனுள் கடந்தனன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைதமிழினமும் குரங்கினமும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;மரக்கிளை வாழும் மந்தியின் மானம்நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!மானம் பரவுதற் கானவை இயற்றுக; தாய்மையும் பொதுப் பணியும் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,அறியாக் குழவி அலறுதல் போல,அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்தாய்மைப் பண்பே…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 12 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க                   மலையுறை யடிகள் மலரடி வணங்கிக்  5 பூங்கொடி நிகழ்ந்தன கூறல்           காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியின் பூரிப்பு  அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே! ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே ! தகப்பன் தாயெனத்  தகுவழி  காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!           உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்       135           கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல் – தொடர்ச்சி) பூங்கொடி எரிந்த ஏடுகள் அண்டையில் நின்ற அந்நூல் நிலையப்பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், இன்னும் உளவோ ஏடுகள் என்னவும்அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன,வெந்நீர் வேண்டி விறகென அவற்றைஎரித்தோம் என்றனன்; துடித்ததென் மனனே,90 எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! i கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ!கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே!வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும்கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்;95 என்னே! என்னே இவர்தம் மதிதான்! மடமை என்கோ? கொடுமை என்கோ?படம்விரி…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப்புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன்,நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்அல்லும் பகலும் செல்லும் சிதலும்சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சியகுறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ!தமிழுக் குறுபகை எத்தனை தாயே!அமுதத்தமிழே! அன்னாய்! வாழி!அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம்நவையற நிறுவி நடத்துதல் என்பணி,நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்;…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல் – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 11. ஏடு பெற்ற காதை பொழிலில் பூங்கொடி தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்க் தோமறு தமிழ்க்குக் கொண்டுகள் ஆற்றப் பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள்  பொழில் நலங் காணும் விழைவினள் செல்வுழி, மூதாட்டி வருகை மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி நரை மூதாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும் முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள்,  அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே எதிர்ப்பட் ‘டாயிழாய் யார்நீ…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி) பூங்கொடி எழுச்சி யூட்டல் அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! பொருள்நூல் உணர்த்தல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்அகம்எனப் புறம்என வகைபெறு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி வருந்துதல் உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்நின்னலம் சிறிதும் நினையார் உளரே’என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி; தாமரைக்கண்ணி அறிவுரை உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்தமிழ்காப் போரென நினைப்பது தவறு; இருவகைப் பகை சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம் மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி; பன்மொழி பயிலெனல் ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!தெலுங்கு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடிகோமகன் நிலைமை கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சியகோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30பாமக னாகிய பாவலன் பெயரால்படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்;உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார்தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமைமுடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்’ 35எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்துமனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி; பொதுப்பணி வேடர் புரிபணி உளத்தில் பூத்த தன்றே!தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்;மதுநலங் கண்ட வண்டென மக்களும்மதிமயக் குற்று…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்குஉணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇநீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழிகூறா நின்றனள்; கூறிய நங்கையை 10ஆரத் தழுவி அப்பெரு மாட்டிவீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் அன்னையும்…

1 2 14