குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்
குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் நூலாய்வு: 1. சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை. இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார்….
வெருளி நோய்கள் 1461 -1465: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1456 -1460: தாெடர்ச்சி) வெருளி நோய்கள் 1461 -1465 00 நிசான் வண்டிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நிசான் வெருளி.பன்னாட்டு உந்து நிறுவனமான நிசான் பொறியுந்து நிறுவனம்(Nissan Motor Co., Ltd.) சுருக்கமாக நிசான் என அழைக்கப்பெறுகிறது.00 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1456 -1460: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1451 -1455: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1456 -1460 நாற்பதாம் எண் தொடர்பான அளவுகடந்த மிகுதியான பேரச்சம் நாற்பதாம் எண் வெருளி.“நாற்பது வயதில் நாய்க்குணம்” என்ற பழமொழியாலும் எண் 40 மீது கவலைப்படுவோர் உள்ளனர். வெற்றி தோல்வியும் நலமின்மையும் யாவருக்கும் வரும். இருப்பினும் இராகுவின் தன்மை கொண்ட 40இற்கு நலக்குறைவும் தோல்வியும் பயனாக அமையும் என எண்ணி இந்த எண் மீது தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர்.நான்காம் எண் வெருளி உள்ளவர்களுக்கு 40 ஆம் எண் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.Saranta…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்ட செய்தி குறித்து 17 ஆவது கட்டுரை தெரிவிக்கிறது. 21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்டது. அப்போதைய மாகாண ஆளுநர் சான் எருசுகின் பிரபு இதனை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் உள்ளூர்ச் சிக்கலில் மாட்டிக்காெள்ள வேண்டா என்ற எண்ணத்தில் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ஆசிரியர். அன்றே இது குறுஞ்செய்தியாக விடுதலை இதழில் வெளிவந்ததை எடுத்துரைத்துள்ளார். அத்துடன் மறுநாள் விடுதலையில்…
வெருளி நோய்கள் 1451 -1455: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1446 -1450: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1451 -1455 நாய்கள் மீதான இயல்புமீறிய பேரச்சம் நாய்வெருளி.நாய் குரைப்பு ஒலி, நாய் அருகே வருதல், நாய்க்கூட்டம், நாய் தன்னையோ பிறரையோ துரத்தல், நாய்க்கடிக்கு ஆளானவர்கள் அருகில் இருத்தல், நாய் கடித்தல் போன்ற சூழல்களில் மிகுதியான பேரச்சம் கொள்ளுவர்.Cyno, kyno ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் நாய்..00 நாய்க்குட்டிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் நாய்க்குட்டி வெருளி.நாய் வெருளி – Cynophobia / Kynophobia உள்ளவர்களுக்கு நாய்க்குட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.நாய்க்குட்டியின், மேலே தாவிக்…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம்
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம் சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫ – 645) நாள்: வைகாசி 10, 2057 ஞாயிறு 24.05.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், தலைமை : இலக்குவனார்…
வெருளி நோய்கள் 1446 -1450: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1441 -1445: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1446 -1450 நாட்டுப்புற இசை / நாட்டார் இசை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாட்டார் இசை வெருளி. நாட்டுப்புற இசை என்பது மரபு வழியிலான இசையே. செவ்விசையும் இதில் அடங்கும். எனினும் அடித்தட்டு மக்கள் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், இதனை இழிவாக எண்ணுவோர் பலர் உள்ளனர். இது, போர், ஒடுக்குமுறை, அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரலாகவும் (Protest Music) பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பூர்வகுடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள், அவர்களின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கும், இனப்படுகொலை, …
கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி) சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும் ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார். இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு ஏ தாழ்ந்ததமிழகமே! என்று நீ சமூக நீதி பெறுவாய்? ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே! என்று நீ சமநீதி…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34: ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! : இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள் பாடிய புலவர் – அரிசில் கிழார் பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. காலத்துப் பாடல் துறை:…
வெருளி நோய்கள் 1441 -1445: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1436 -1440: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1441 -1445 நாடா(ribbon) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாடா வெருளிLigament என்றால் விசி=இறுகக்கட்டு எனப் பொருள். உடலியலில் எலும்புகளைப் பிணைக்கும் மெய்ம்மி(திசு) நார், உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு எனப் பொருள்கள். இது நாடா போன்ற அமைப்பாகும். நாடா அல்லது நாடா போன்ற ஒன்றைப் பார்க்கும் பொழுது அல்லது அதனுடன் தொடர்பு ஏற்படும் பொழுது தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாவதை இது குறிக்கிறது. பரிசுப்பொருள் கட்டு அல்லது பொதிவு மீது சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் நாடா-வைக் காணும் பொழுது அல்லது அதனை…
வெருளி நோய்கள் 1436 -1440: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1431 -1435: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1436 -1440 நன்னீர் மீன்(trout) குறித்த வரம்பற்ற பேரச்சம் நன்னீர் மீன் வெருளி.ஒருவரின் கடந்த கால அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் மீன் வெருளி தூண்டப்படலாம். அவ்வாறில்லாமல் எதிர்பாராத விதமாகவும் மீன் வெருளி ஏற்படலாம்.மீன்களைப் பார்ப்பது, முகர்வது, கேட்பது, தொடுவது மற்றும் உண்பது குறித்த பேரச்சத்தைக் குறிப்பிடும் மீன்வெருளி(Ichthyophobia) உள்ளவர்களுக்கு நன்னீர் மீன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.Pestrofa என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நன்னீர் மீன் எனப் பொருள்.00 நாவற்பழம் அல்லது நாகற்பழம் மீதான வரம்பற்ற பேரச்சம் நாகற்பழ…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: இலக்குவனார் திருவள்ளுவன்
(கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2 “ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்…” என்பது அண்மையச் செய்தியிதழ்களில் காணக்கிடக்கும் தொடராகும். “இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்பதுதான் வழக்கு மொழி. “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” எனத் தவறாகப் பெயரிட்டுத் திரைப்படம் ஒன்று வந்து விட்டது. இப்போது இந்தத் தப்பான தொடரையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள். “இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்று…
