இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

(பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் – தொடர்ச்சி) இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968), வள்ளுவர்‌ கண்ட இல்லறம் (1971)  எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம்,5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்,7. ஒப்புமைக்…

இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு

தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை ஐயா இலக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – செந்தமிழன் சீமான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்! அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்! சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி! தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டித் தன்னந்தனியனாக…

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார் ”சலுகை போனால் போகட்டும் – என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட – என் தமிழ் விடுதலை ஆகட்டும்” என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர்தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள்…

பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை

இந்நாள் – அந்நாள் Last updated: September 3, 2026 3:39 pm viduthalai பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973) பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர். இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்–  இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாக 17-11-1909 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். பகுத்தறிவு பேராசான்…

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்! தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன. இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை. அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.)  குறள்நெறிக் காவலர், 4.)  குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன. குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம். அ.) திருக்குறள்…

இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்

இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை அன்னைத்தமிழ் அரும்புதல்வர் அவனிதனில் நிறைந்திருக்க திண்ணைதனில் காத்திருந்து  தன்வழியென வீற்றிராது உணர்வுடைத்த உளத்தோடு உயிரெனவே உரமூட்டும் தமிழினமே  தரணியிலே தகைமையெனச் சான்றுடைத்து ஆக்கமும் ஊக்கமுமாய்  ஆண்டாண்டு ஒளிர்ந்திட்ட அன்பறமும் அறிவொளியும் அமைந்தநல் தொன்மையாய் சிந்தைகுளிர் சொல்லுடைத்து செவ்விதழில் சிறப்புடைத்த வண்டமிழின் வாழ்விற்கு வளமுடைத்து காத்திடவே மொழிகளது வரிசையிலே  முக்கனிகள் தோற்றோட தென்றலது மென்மையிலே புயல்கூட வெட்கமுற ஆழ்மனத்துச் சிந்தையிலே ஆக்கமுற நிறைந்தவளாய் அறிவார்ந்த இனத்தோரின் அகங்குளிர வேண்டுமென உளமார்ந்த உழைப்பாலே உரமிட்டுத் தமிழ்காத்த தகைமைசார் தமிழரிடை தானுமுண் டெனக்கூறும் நிலைதனையே…

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக…

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 20, 2057 ஞாயிறு 06.09.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை:     கவிஞர் தமிழ்க்காதலன் ஆளுமையர் உரை தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் பாதுகாப்புப்பேரவை முனைவர் தானியல் செயராசு, தகைசால் பேராசிரியர், நூலாய்வு:…

இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்

இலக்குவனார் திருக்குறள் விருது தகுதியானவர்கள் தகவல் தரலாம் திருக்குறள் குறித்த  கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும். 1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும். மேலும்,…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்

தமிழே விழி!                                     தமிழா விழி! இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம் நாள்: ஆவணி 06, 2057 ஞாயிறு 23.08.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க் காதலன்…

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார். அவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டி கடந்த ஆனி 31,2057/15 – 7 – 2026 அன்று தில்லி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அரசமைப்பு மன்றத்தில் (Constitutional Club) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலகக் கல்விச் சாதனை விருதுக் குழு(World Educational Achievement Award Council) அவருக்கு…

1 2 872