வெருளி நோய்கள் 1436 -1440: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1431 -1435: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1436 -1440 நன்னீர் மீன்(trout) குறித்த வரம்பற்ற பேரச்சம் நன்னீர் மீன் வெருளி.ஒருவரின் கடந்த கால அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் மீன் வெருளி தூண்டப்படலாம். அவ்வாறில்லாமல் எதிர்பாராத விதமாகவும் மீன் வெருளி ஏற்படலாம்.மீன்களைப் பார்ப்பது, முகர்வது, கேட்பது, தொடுவது மற்றும் உண்பது குறித்த பேரச்சத்தைக் குறிப்பிடும் மீன்வெருளி(Ichthyophobia) உள்ளவர்களுக்கு நன்னீர் மீன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.Pestrofa என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நன்னீர் மீன் எனப் பொருள்.00 நாவற்பழம் அல்லது நாகற்பழம் மீதான வரம்பற்ற பேரச்சம் நாகற்பழ…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: இலக்குவனார் திருவள்ளுவன்
(கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2 “ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்…” என்பது அண்மையச் செய்தியிதழ்களில் காணக்கிடக்கும் தொடராகும். “இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்பதுதான் வழக்கு மொழி. “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” எனத் தவறாகப் பெயரிட்டுத் திரைப்படம் ஒன்று வந்து விட்டது. இப்போது இந்தத் தப்பான தொடரையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள். “இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்று…
வெருளி நோய்கள் 1431 -1435: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1426 -1430: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1431 -1435 நற்பேறு குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது நற்பேற்று வெருளி.eutýchēma என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நற்பேறு எனப் பொருள்.00 எளிதில் ஈரம் உறியாத மேற்பரப்புடைய பொருள்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம் நனையா வெருளி.தீவிர நீர் விலக்கும் தன்மையைக் கொண்ட தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதால் இதனைத் தாமரை இலை விளைவுப் பேரச்சம் என்றும் கூறுவர். 00 மூச்சு நல்லதாக இருக்க வேண்டும் என்ற அளவுகடந்த பேரச்சம் நன்மூச்சு வெருளி.கெட்ட மூச்சு குறித்து…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்! அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல்…
வெருளி நோய்கள் 1426 -1430: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1421 -1425: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1426 -1430 நல வாழ்வு தொடர்பான அளவற்ற பேரச்சம் நல வாழ்வு வெருளி.பெரும்பாலும் தூய்மையின் மீதான மிகுதியான நாட்டம், நோய்வாய்ப்படுவோமோ என்ற பெருங்கவலை ஆகியவற்றால் உருவாகும் தேவையற்ற பேரச்சம்.தோய்நிலை வெருளி(Hagiophobia) நோய் வெருளி, நோய்மி வெருளி உள்ளவர்களுக்கு நலவாழ்வு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 நலக்குறைவு குறித்த அளவுகடந்த பேரச்சம் நலமிலி வெருளி.காய்ச்சல், நோயால் வருந்துதல் முதலியவற்றால் பெருங்கேடு விளையப்போவதாக அஞ்சும் பொழுது நலமிலி வெருளி வருகிறது.patho என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வருந்துதல் எனப்…
நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – இலக்குவனார்திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27: தீயன விலக நல்லோரைச் சார்க! அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வு – நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. நாலடியார் பாடல் 171 [அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகிய(வ்)வும் – நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே புல் பனி பற்று விட்டு ஆங்கு.] பொருளுரை: அறியாப் பருவத்தில்…
வெருளி நோய்கள் 1421 -1425: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1416 -1420: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1421 -1425 ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நம்பக வெருளி.நம்பிக்கை வைப்பது தொடர்பான பேரச்சம் பிறருடான உறவையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். பொதுவாகக் காதலர்களிடையே நம்பிக்கை வெருளி ஏற்படுவது காதலை முறிக்கும்.நம்பிக்கை மோசடியைச் சந்தித்தவர்கள் அல்லது பிறரது நம்பிக்கை மோசடியை அறிந்தவர்கள் பிறரை நம்புவது குறித்துக் கவலைப்படுவர்.யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்உறவெல்லாம் முள்ளாகும்உயிரெல்லாம் கல்லாகும்எனப் ‘பறக்கும் பாவை’யில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகள் நம்பக வெருளியின் வெளிப்பாடே.‘எங்க…
குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459) [ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ] மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும். பதவுரை: மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்;…
வெருளி நோய்கள் 1416 -1420: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1411 -1415: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1416 -1420 நடை பேசி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடை பேசி வெருளி.நடைபேசிகள்(walkie-talkies) காவல் துறையினரால் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, காவல் துறையின் குறியீடாகக் கொண்டு இவை குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். காவலர் சிலர் கவனக் குறைவால் தமக்குரிய நடைபேசியைத் தொலைத்துள்ளனர்.இதுபற்றி அறிந்த பிறர் விழிப்பாக இருப்பதற்கு எண்ணி அளவு கடந்து கவலைப்படுகின்றனர்.00 முகநூலில் ஒருவர் விடுக்கும் நப்புக் கோரிக்கையை மற்றவர் ஏற்காததால் வரும் அளவுகடந்த பேரச்சம் நட்பு ஏற்காமை வெருளி.எல்லாக் குமுகத்…
ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள்
ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள் ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில் – சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104 பதவுரை: மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்;…
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை! தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது. தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல், குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த…
வெருளி நோய்கள் 1411 -1415: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1406 -1410: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1411 -1415 நடுகல் குறித்து அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது நடுகல் வெருளி.நடுகல் குறித்துச் சங்க இலக்கியங்கள் 18 இடங்களில் குறித்துள்ளன. நடுகல் வணக்கம் தொன்றுதொட்டே உள்ளது. நாட்டிற்குக் காவலாக விளங்கிப் போரில் வீர மரணம் அடைந்தவர்க்குத்தான் நடுகல்கள் அமைக்கப்பட்டன.கல்லறைவெருளி-Coimetrophobia / Koimetrophobia), அழி பொருள் வெருளி(Necrophobia), புதைவுவெருளி-(Taphephobia/ Taphiphobia/ Taphophobia/Taphosphobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது நடுகல் வெருளி.coimetro என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் புதைவிடம் எனப் பொருள்.00 நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நடுக்க…
