அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 89. சிந்தனை செல்லும் வழி சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் – ‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்கணமும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர். அத்தகைய…
குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? பெரியார் ஈ.வெ.இரா.குறித்து நாம் பின்வருவனவற்றை அறிவோம். 1. பெரியார் ஈ.வெ.இரா. நிறைகள் 2. பெரியார் ஈ.வெ.இரா. குறைகள் 3. பெரியார் ஈ.வெ.இரா. மீது குறைகளாகச் சொல்லப்படுவன 4. பெரியார் ஈ.வெ.இரா. குறித்த பழிப்புரைகள் பெரியார் மீதான பழிப்புரைகளையும் குறைகளாகச் சொல்லப்படுவனவற்றையும் பார்த்தாலே அவரைப்பற்றிய நிறைகளையும் நாம் அறியலாம். எனவே, மேற்குறித்தவற்றை நாம் வரிசை மாறிப்பார்க்கலாம். இதழ்களிலும் பிற…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 16 : ஆகமங்களின் தோற்றம் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – தொடர்ச்சி) 5. ஆகமங்களின் தோற்றம் வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘’இந்தியத் தத்துவத்தின் சுருக்கம்” என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒருசிறிதும், அல்லது, அறவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேத நெறிக் கடவுள் வழிபாட்டு முறையான வைதீக நெறி , மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது பெரும்பாலும் அழிந்தே விட்டது….
குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 418) கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர். புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி…
சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 911. assistance international/International assistance பன்னாட்டுதவி பன்னாட்டு உதவி ஒரு நாட்டிற்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள். பன்னாட்டு உறவுகள் மூலமும் பன்னாட்டவை( UNO), பன்னாட்டுப் பண நிதியம் (International Monetary Fund) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமும் கிடைக்கும் உதவிகள். 1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் காவல் துறை(The International Criminal Police…
சட்டச் சொற்கள் விளக்கம் 891-895
(சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890) சட்டச் சொற்கள் விளக்கம் 891-895 891. Assign உரிமை அளி; உரிமை மாற்று அளி; ஒப்புவி; குறித்தளி கையடை கொற்றம் வை வணிகத்திலும் ஒப்பந்தங்களிலும் உரிமையளித்தல் முதன்மை இடத்தைப் பெறுகிறது. உரிமைகளை அல்லது நலன்களை ஒரு தரப்பாரிடமிருந்து மற்றறொரு தரப்பாருக்கு மாற்றுவதைக் குறிக்கிறது. உட்குத்தகைக்கும் உரிமை மாற்றியளித்தலுக்கும் வேறுபாடு உள்ளது. உட்குத்தகை என்பது குத்தகையாளர் உரிமைகளில் ஒரு பகுதியை மட்டும் மாற்றியளித்தலைக் குறிக்கிறது. உரிமையளி என்பது குத்தகையாளர் ஒப்பந்தப் பின்னணியில் மற்றொருவருக்கு அல்லது மற்றொரு…
தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை
தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவில் ம.இராசேந்திரன் உரை கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன.. இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச், சென்னை எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள்…
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு, சென்னை
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528) தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தொல்காப்பிய விருதுகள், இலக்குவனார் விருதுகள் வழங்கலும தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வெளியிடலும் நூல்கள் வெளியிடலும் ஆகிய தொடர் விழா சென்னையில் நடைபெற…
அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் ஊ.போப்பு, எ.எல்லீசர், ஏ.ஞானப்பிரகாசர், ஐ.தனிநாயகம்- பா.வளன் அரசு
(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு – தொடர்ச்சி தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 6. இங்கிலாந்துச் சான்றோன் சார்ச்சு யுக்ளோ போப்பு (1820-1908) : அருளாலயம் உருவாக்குதல், அறிவாலயம் எழுப்புதல், திருக்குறள் முதலான இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், அயல் நாட்டவர்க்குத் தமிழை அறிமுகப்படுத்துதல், தமிழ் உணர்வையும் பண்பாட்டையும் நிலைநாட்டுதல் ஆகிய பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்ச்சிக்காகத் தொண்டுள்ளத்தோடு சேவை செய்த செம்மல் போப்பு. எட்டு ஆண்டுகள் சாயர்புரத்தில் திருத்தொண்டாற்றிய…
சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 711. Actus Reus Non Facit Reum Nisi Mens Sit Rea குற்றம் புரியும் நோக்கில் செய்யாத செயல் குற்றமாகாது. குற்ற மனமில்லாத வரை செயல் ஒருவரைக் குற்றவாளியாக்காது, என்பதே இதன் விளக்கமாகும். பொது விதியாக, மனப் பிழை இல்லாமல் மேற்கொள்ளும் செயலுக்குக் குற்றவியல் சட்டம் பொறுப்பாக்காது. எனவே, மனமும் செயலும் சட்டமுரணாக இருந்தால்தான் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்ல இயலும். இலத்தீன்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல் “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” (948) இக்குறளிலுள்ள “நோய் நாடி” என்றது நோயை நாடிபிடித்து ஓர்ந்து பார்த்து “இன்ன நோய்” என்றறிவது. இஃது இக்கால மருத்துவ அறிவியலில் நோய் காணல் (Diagnosis) எனப்படுகிறது. நோய் முதல் நாடுவது, தமிழ் மருத்துவத்தில் நோய்க்குக் காரணம் “வளி முதலா எண்ணிய மூன்றில் எது” என்று நாடி கொண்டே காணுதல். இஃது இப்போது சிறுநீர்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 651. Action, penal தண்டனைக்குரிய நடவடிக்கை அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல். 652. Action, Remedial மீட்புத் தீர்வு தீர்வு நடவடிக்கை தீர்வுச் செயற்பாடு குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான…