வெருளி நோய்கள் 756-760: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 751-755: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 756-760 காலியாக உள்ள அறை குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் காலியறை வெருளி.காலி என்பது அறிவியல் சார்ந்த நல்ல தமிழ்ச்சொல். அறை வெறுமையாக உள்ளது அல்லது வெற்றிடமாக உள்ளது என்று சொல்கிறோம். ஆனால் அறையில் காற்று உள்ளதே! அப்படி என்றால் அறையில் ஒன்றுமில்லை, வெற்றறை என்பது தவறல்லவா? எனவேதான் வேறு பொருள் இல்லை, ஆனால் காற்று உள்ளது என்னும் பொழுது கால்(காற்று)+இ=காற்றை உடையது என்னும் பொருளில் காலி என்கின்றனர்.காலி அறை என்றில்லை. திடலாகவும் திறந்த வெளியாகவும்…

தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! – இலக்குவனார்திருவள்ளுவன்

இலக்கியம் – நூல் அறிமுகம் நவம்பர் 17, 2025 தாய் / thaaii.com நவம்பர் 17: தமிழ்ப் போராளி இலக்குவனாரின் 116 ஆவது அகவை நிறைவு நாள். தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’. இலக்குவனார் பள்ளி மாணாக்கராக இருந்த பொழுதே கவிஞர், சொற்பொழிவாளர், மொழி பெயர்ப்பாளர் என விளங்கினார். புலவர் மாணாக்கராக இருந்த பொழுது கட்டுரையாளர், நூலாசிரியர், தனித் தமிழ்ப்பரப்புநர், தமிழாசிரியர்…

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பெருமங்கலமும், 2025

தமிழேவிழி!                                      தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் & இலக்குவனார் இலக்கிய இணையம் உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 116 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) வுிழா நாள் ஐப்பசி 30,2056 / ஞாயிறு 16.11.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தொகுப்புரை: கவிஞர்…

வெருளி நோய்கள் 634-638: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 629-633: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 634-638 634. கண்ணாடி மேல் நிற்றல் வெருளி  – Stasihyelophobia கண்ணாடி மேல் நிற்பது குறித்த பேரச்சம் கண்ணாடி மேல் நிற்றல் வெருளி. கண்ணாடி உடைந்து விடலாம், கண்ணாடிமேல் நிற்பதால் உடைந்து கீழே விழலாம், காயம் படலாம் உயரத்தளத்தில் கண்ணாடி மீது நிற்பதால் ஏதும் எதிர்பாரா நேர்வு நிகழ்ந்து கீழே விழுந்து உயிர் இறக்க நேரிடலாம் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாகிக் கண்ணாடி மேல் நிற்றல் வெருளிக்கு ஆளாகின்றனர். சிகாகோவில் 1353 அடி உயரத்தில் உள்ள…

 க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை   நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட  நன்மை, தீமைகள்      

       ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் தொடர்ச்சி) க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை          நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு           ஏற்பட்ட  நன்மை, தீமைகள்             (முதல் பரிசு பெற்ற கட்டுரை) முன்னுரை கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் முதல், இடை, கடை என்ற முத்தமிழ்க் கழகங்கள் நிறுவி தமிழ் ஆய்ந்தனர், தமிழ் அரசர்களான பண்டையர் (பாண்டியர்). தமிழ் தோன்றிய காலம் வரையறுத்துக் கூறற்கரிதாயுள்ளது. ‘இலமூரியா’க் கண்டம் என்ற குமரிக்கண்டம் ஐந்துமுறை கடலால் கொள்ளப்பட்டது. இந்துமாக்கடல் பரப்பில் இப்பொழுது காணப்படும் சிறு…

வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும். தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த  நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று…

வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference  Call – பன்முகஅழைப்பு : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 Conference  Call – பன்முகஅழைப்பு Conference  Call என்றால் என்ன?  Conference  Call என்றால் நேர் பெயர்ப்பாகப் பலரும் மாநாட்டு அழைப்பு என்றே பயன்படுத்துகிறார்கள். சிலர் கலந்துரையாடல் அழைப்பு என்கிறார்கள். சிலர் கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்கிறார்கள். இது பேசுவதாகவும் இருக்கலாம், காணுரையாகவும் இருக்கலாம். இடைக்கால இலத்தீனிலும் இடைக்கால் ஃபிரெஞ்சிலும் con- என்றால்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010  1006. Authorities           அதிகார அமைப்புகள்‌ ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள் 1007. Authority inferior                கீழ்நிலை  அதிகாரி   எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி  1008. Authority, power and           அதிகாரமும்‌ அதிகார உரிமையும்‌ Authority  என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு,…

சாதி எதிர்ப்புப் போராளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் முன் மாதிரிச் செயல்.

பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரன் சாதிக்கு எதிராக வாய்ப்பேச்சு மட்டும் பேசவில்லை. பிள்ளைகள் சான்றிதழ்களிலேயே சாதியைக் குறிப்பிடவில்லை. தன் மகன் தியாகராசன் சான்றிதழில் அவர் சாதியைக் குறிப்பிடவில்லை. எனினும் பிராமணர் அல்லாதார்  எனக் குறிப்பிட்டுள்ளார்  அவருடைய பள்ளி இறுதி வகுப்புச்சான்றிதழ் இதோ மேலே உள்ள சான்றிதழின்படி.

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…

1 2 45