எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 28. ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: தொடர்ச்சி) ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ் நாளும் வெளிவரும் மின்னிதழ் ஒன்றுக்குப் ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ளது. செய்தியாளர்கள், எதற்கெடுத்தாலும் ‘பக்கா’ என்று அடைமொழி சேர்த்துச் செய்திகளைத் தருகின்றனர். ‘பக்கா’ என்னும் உருதுச் சொல்லைச் சரியான, பெரிய, திருத்தமான, திருத்தமாக, செம்மையாக எனப் பல பொருள்களில் பயன்படுத்துகின்றனர். இத்தனைத் தமிழ்ச்சொற்களை இடத்திற்கேற்பப் பயன்படுத்துவதை விட்டு விட்டு உருதுச்சொல்லைப் பயன்படுத்தும் பைத்தியப் போக்கு எப்படி வந்தது? அண்மைய மாதங்களில் ‘பக்கா’ பைத்தியத்துடன்…
குறட் கடலில் சில துளிகள் 48: ஆவது, அழிவது, விளைவதை ஆய்ந்து செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன் சேர்க! – தொடர்ச்சி) குறட் கடலில் சில துளிகள் 48 ஆவது, அழிவது, விளைவதை ஆய்ந்து செய்க! அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். (திருக்குறள், ௪௱௬௰௧ – 461) ஒரு செயலைத் தொடங்கும் முன் அதனால் ஏற்படும் அழிவுகளையும் ஆகக் கூடியவற்றையும் மொத்தத்தில் ஏற்படும் ஆதாயத்தையும் ஆராய்ந்து முடிவெடுத்துச் செய்க. பதவுரை அழிவதூஉம்=அழிவதும், கெடுவதும்; ஆவதூஉம்=ஆகக்கூடியதும், உண்டாகுவதும்; ஆகி=உண்டாகி, ஆய்; வழிபயக்கும்=தரும், அதன் வழியாக உண்டாதல், பின்வரும்; ஊதியமும்=நன்மையும், ஆதாயமும், வருவாயும்,…
வெருளி நோய்கள் 1536-1540 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1531-1535 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1536-1540 நேர்ச்சி(accident) குறித்த இயல்பு கடந்த தேவையற்ற பேரச்சம் நேர்ச்சி வெருளி.தன்னால் நேரும் அல்லது பிறரால் நேரும் நேர்ச்சித் துன்பத்தால் உடைமை யிழப்பு, பொருள் இழப்பு, உயிரிழப்பு ஏற்படும் என்று காரணமின்றிக் கவலையில் மூழ்கிப் பேரச்சம் கொள்வர். இயல்பாகச் செல்லும்பொழுது கூட நேர்ச்சி நிகழும் என்று அஞ்சுவர்.பயணம் மேற்கொள்பவர்களுக்கு நாம் சரியாக விதிமுறை களைப் பின்பற்றிப் பயணம் மேற்கொண்டாலும் பிறர் விதிமுறை மீறி அல்லது போதையில் நேர்ச்சியை உண்டாக்குவர் என்ற அச்சம் ஏற்படும்.இயந்திரங்களைப் பயன்படுத்துவோரிடமும்,…
வெருளி நோய்கள் 1381 -1385: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1376 -1380: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1381 -1385 வணிக முறையிலான தொலைக்காட்சி மீதான அளவுகடந்த பேரச்சம் தொலைக்காட்சி வெருளி.வணிக ஆதாயத்திற்காகப் பொய்யான செய்திகளைப் பரப்பி நம்ப வைப்பார்கள் என்பதுபோன்ற உணர்வுகளால் தொலைக்காட்சி மீது அளவுகடந்த வெறுப்பும் அச்சமும் கொள்வர்.காண்க: தொலைக்காட்சி நிகழ்ச்சி வெருளி(TVshowphobia)00 தொலைபேசி மணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலைபேசி மணி வெருளி.தொலைபேசி மணியைப் பேரிடர்(அபாய) மணியாக எண்ணிப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். தொலைப்பேசி மணி என்றும் குறிப்பர்.காண்க: Telephonobia00 தொலைபேசியில் ஒருவரை அழைப்பதற்கு அல்லது தொலைபேசியில் பிறரிடம்…
தமிழை முன்னிலைப்படுத்தும் விசய்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழை முன்னிலைப்படுத்தும் விசய்! நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வாகைசூடி அருந்திறல் புரிந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசய். அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அகரமுதல மின்னிதழ் சார்பாகவும் தமிழ்க் காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பர்களால் தளபதி என அழைக்கப்பெறும் விசய், கட்சி தொடங்கிய ஈராண்டுகள் இரு திங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் ஏறும் அருவினை புரிந்துள்ளார். பெரும்பாலும் புதிய வேட்பாளர்களையே நிற்க வைத்து, வெற்றி கண்டுள்ளார். பண வலிமை, சாதி வலிமை முதலியவற்றை…
வெருளி நோய்கள் 1346 -1350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1341 -1345 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1346 -1350 தென் கரோலினா(Southcarolina) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் கரோலினா வெருளி.தென்கரோலினா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தென் தகோட்டா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் தகோட்டா வெருளி.தென் தகோட்டா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தெற்குப் பகுதி குறித்த வரம்பற்ற பேரச்சம் தென் வெருளி.தென்திசை…
வெருளி நோய்கள் 1341 -1345 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1336 -1340 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1341 -1345 அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்” என்றால் நமக்கு முன்னவரோ பின்னவரோ செத்திருந்தால்தானே சுடுகாடு சென்றிருப்போம் எனப் பொருள். அதுபோல் முன்பின் அறியாதவர்கள் என்றால் அவரது குடும்பத்தில் அல்லது வாழ்விடத்தில் அல்லது பணியிடத்தில்…
வெருளி நோய்கள் 1316 -1320 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1311 -1315 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1316 -1320 கணவன் அல்லது மனைவி, தன் மனைவி அல்லது கணவன்மீது கொண்டுள்ள அளவுகடந்த பேரச்சமே (வாழ்க்கைத்) துணைவர் வெருளி.துணைவரின் தவறான பழக்க வழக்கங்கள், முரட்டுக் குணங்கள், பொறுப்பற்ற தன்மை, கட்டாயத் திருமணம், உள்ளத்தில் இடம் தராமை போன்றவற்றால் வாழ்க்கைத் துணைவர் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தினால், திருவள்ளுவர் கூறுவதுபோல் வாழ்க்கைத் துணை நலத்தைப் பேணினால், இதற்கு இடமில்லை.00 வண்ணங்களைத் தூவி வரையப்படும் துமி…
சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 1051. Apprentice at law பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர் பயிற்சிச் சட்டம், 1961 இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. 1052. Apprenticeship பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற் பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது,…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௪. எழுக தமிழினமே!- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். மதுக்கடைகளை அகற்றக் கோரி மதுக்கடைகள் முன் மறியல் ஆர்ப்பாட்டம் செய்தல். உப்புக் காய்ச்சுதல், உப்பெடுத்தல், வரிகொடாப் போராட்டம் நடத்தல். சட்டப்படி காவிரிநீர் கொடாமலும், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் முன் திருவள்ளுவர் உருவச்சிலை வைக்கக் கூடாதென மறுத்து கருநாடகம் வாழ் தமிழ்களைப் படுகொலை செய்து வெருட்டியடித்த கருநாடக அரசுடன் எத்தகு அரசியல் தொடர்பும்…
வெருளி நோய்கள் 1281 -1285 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1276-1280 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1281 -1285 திறனாய்வு அல்லது இடித்துரை குறித்த வரம்பற்ற பேரச்சம் திறனாய்வு வெருளி.நிறை காண்பதற்கான குறை கூறுதல் என்பது வரவேற்கத்தக்கதுதான். எனினும் தங்கள் செயல் அல்லது படைப்பைப் பற்றித் தவறாகக் கூறுவதாக எண்ணி அஞ்சுவோர் உள்ளனர். சிலர் நடுநிலை தவறித் தனிப்பட்ட தாக்குதலாகத் திறனாய்வு செய்வர். இதனால் திறனாய்வு என்றாலே தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.enissein என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குறை / பழிமொழி.001282.திறன் கருவி வெருளி – Dachoingphobia / Ergalilektriphobia…
நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி) நாலடி நல்கும்நன்னெறி 26 வறுமையிலும் உதவுக! உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்செய்வர் செயற்பாலவை. நாலடியார் பாடல் 185 பொருளுரை: மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும் ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும் தம்மால் இயலும் அளவு…
