(வெருளி நோய்கள் 519-523: தொடர்ச்சி)

ஏணி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏணி வெருளி.
உயரத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கும் ஏணி மீது அச்சம் இருக்கும்.
ஏணியில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது கால் தவறி விழுந்துவிடுவோம் அல்லது ஏணி புரண்டு விழுந்து விடும் என்றெல்லாம் தேவையற்ற கவலை கொள்ளேவார் ஏணி வெருளிக்கு ஆளாகின்றனர்.
climac என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏணி.
00

ஏந்து(appliance) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏந்து வெருளி.
சமையலுக்குப் பயன்படும் ஏனங்கள் முதலான துணைப் பொருள்கள், அன்றாடத் தேவை நிறைவேற்றத்திற்கு உதவும் குளிர்ப்பி(Air conditioner), தேய்ப்பி(iron box), உலர்த்தி(Hair dryer) முதலான எண்ணற்ற பயன்பாட்டுப் பொருள்களும் தொழிலாற்ற உதவும் துணைக்கருவிகளும் ஏந்துகள்(appliances) எனக் குறிக்கப்பெறுகின்றன.
இவற்றின் செம்மையற்ற இயக்கம் அல்லது பழுது போன்றவற்றால் அல்லது கவனக் குறைவாகக் கையாண்டால் ஏற்படும் பேரிடர் போன்றவற்றால் தேவையின்றி அளவுகடந்து கவலை கொள்வர்.
00

ஏப்பம்(belch) குறித்த காரமற்ற அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஏப்ப வெருளி.
தான் ஏப்பமிட்டாலோ பிறர் ஏப்பமிட்டாலோ கக்கினாலோ(வாந்தி எடுத்தாலோ)வரும் ஒலியாலும் நாற்றாத்தாலும் வெறுப்பு கொள்வர்.
eructo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் ஏப்பம், கக்கு.
00

  1. ஏப்பிரல் வெருளி – Siyuephobia/ Aphrilophobia

ஏப்பிரல்(April) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் ஏப்பிரல் வெருளி.
si என்னும் சீனச்சொல்லிற்கு நான்கு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, siyue நான்காம் மாதமாகிய ஏப்பிரல் திங்களைக் குறிக்கிறது.
00

ஏப்பிரல் முதல் நாளில் முட்டாளாக்கப்படுவதாகக் கூறி ஏமாற்றப்படுவது குறித்த ஏற்படும் பேரச்சம் ஏப்பிரல் முட்டாள் வெருளி.
தொடக்கத்தில் பழைய நாட்காட்டி முறைப்படி ஏப்பிரல் முதல் நாள் புத்தாண்டு நாளாகப் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஆனால், புதிய கிரகோரி ஆண்டுக் கணிப்பு முறையை அவைக்கோ(போப்பு) கிரகரி நடைமுறைப்படுத்தினார். அதன் பின்னரும் சனவரி முதல்நாளைப் புத்தாண்டு தொடக்கமாகக் கொண்டாடாமல் ஏப்பிரல் முதல் நாளைக் கொண்டாடினர். இவர்களே ஏப்பிரல் முட்டாள்கள் என அழைக்கப்பட்டனர். ஆனால், அதற்கு முன்னரே 1466 ஆம் ஆண்டு அரசவை விகடகவி, பந்தயம் ஒன்றில் மன்னன் பிலிப்பை விளையாட்டாக மு்ட்டாளாக்கிய நாளே ஏப்பிரல் முட்டாள் நாள் ஆனது என்பர்.
அதேபோல் 1508 ஆம் ஆண்டில் பிரான்சிலும் 1539ஆம் ஆண்டில் தச்சுநாட்டிலும் முட்டாள்கள் நாள் கொண்டாடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
ஏப்பிரல் முதல் நாளன்று மற்றவர்களை விளையாட்டாக ஏமாற்றி இன்பம் காண்பதையே பொழுதுபோக்காக மக்கள் கொண்டுள்ளனர். சிறுவர்கள் பிறர் அறியாமல் அவர்களின் சட்டைகளில் மை தெளித்தல், ‘ஏ.எப்’ என உருளைக்கிழங்கு போன்றவற்றில் முத்திரை செய்து மையில் தோய்த்து பிறர் சட்டையில் பதித்தல், பொய்யான தகவல்களை உண்மைபோல் கூறி நம்பச்செய்தல் போன்றவற்றைச் செய்வர்.
ஏப்பிரல் முட்டாள் (ஏப்ரல் ஃபூல்) என்னும் தலைப்பில் தமிழ் முதலான பல மொழிகளில் படங்கள் வந்துள்ளன. தமிழில் ‘பனித்திரை’ என்னும் திரைப்படத்தில் “ஏப்பிரல் ஃபூல் ஏப்பிரல் ஃபூல் என்றொரு சாதி” எனப் பாடலும் வந்துள்ளது. இவை நகைச்சுவையாக இருந்தாலும் இவைபற்றிக் கேட்டாலே – ஏப்பிரல் முட்டாள் நாளுக்கு அஞ்சுவதால் – அஞ்சுவோர் உள்ளனர்.
தை முதல் நாள் புத்தாண்டு என நடைமுறைப்படுத்திய பின்பு, சித்திரை முதல்நாளைப்புத்தாண்டாகக் கொண்டாடுபவர்களைச் சித்திரை முட்டாள்கள் என்று கேலி செய்யலாமா?

00

(தொடரும்)