துலுக்கப்பயலே! 7 -வைகை அனிசு

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி)  7    துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள்   தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள்…

துலுக்கப்பயலே! 6 -வைகை அனிசு

(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 தொடர்ச்சி) 6 பழமை மாறாத இந்து மரபைப் பின்பற்றும் இசுலாமியர்கள்    சமயம் மாறினாலும் இந்துக்கோட்பாட்டின் படி இந்துக்கள் செய்கின்ற சடங்குகளை இன்றளவும் இசுலாமியர்கள் செய்துவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலத்தெய்வம் இருப்பது போல இசுலாம் மார்க்கத்திற்கு வந்தவர்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்த சடங்குகள் போல மாயாண்டி துணை, கருப்பாயி துணை, எடமலையான் துணை, பதினெட்டாம்பட்டியான் துணை, காமாட்சியம்மன் துணை என்றெல்லாம் ஏகப்பட்ட குட்டித் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.  இந்துக்கள்,  இதே போன்று …

கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு

பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு!  பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…

துலுக்கப்பயலே! 4 -வைகை அனிசு

(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 4 தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும்   கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.   தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…

குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.   நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில்…

கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு

குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…

இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு

இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர் வாழ்வில் இனி்மை இல்லை!   ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை…

துலுக்கப்பயலே! 3 – வைகை அனிசு

(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி) 3 சோனகர்  சோனகர் என்பாரை ஆங்கிலத்தில் மூர்சு / moors என்று அழைக்கின்றனர். இசுபெயினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்தது இசுலாமியம்(கி.பி.711-1492). இக்காலக் கட்டத்தில் ஐரோப்பா  முதலான மேற்கு நாடுகளில் இசுலாம் முதன்மை பெறுவதற்குக் காரணம் இசுலாமியர்களுடைய கல்வி தொடர்பான நாட்டமும் கலை ஈடுபாடுமே! அரேபியரும் வேறு சில இனத்தவரும் சோனகர்/ moors என அழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கர்கள், பேபர்சு இன மக்கள் ஆகியோரையும் இவ்வாறே அழைக்கிறார்கள்.   ‘இசுபெயினி்ல் சோனகர்’ (The…

கடலில் தீரம் புரிந்த கப்பல்களும் சந்தித்த சரிவுகளும் – வைகை அனிசு

100ஆவது ஆண்டை நிறைவு செய்த எம்டன் கப்பல்   உலகம் சுற்றிய முதல் கப்பல்   கடல் பயணங்களில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் வரலாறு குறித்த அதிகமான ஆய்வுகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. உலகத்தை முதன்முதலில் சுற்றிய கப்பல் மெகல்லன் தலைமையில் உள்ள குழுதான். வாசுகோடகாமா 1498 ஆம்ஆண்டு இந்தியாவுக்குள் கடல்வழி கண்டறிந்தவுடன் நறுமணப் பொருள்கள் விற்பனையைப் போர்த்துகீசியர்கள் கட்டுப்படுத்தத் தொடங்கினர். கொலம்பசைப்போலவே போர்த்துக்கீசிய சாகசப் பயணி பெர்டினாண்டு மெகல்லனும், கடலில் ஐரோப்பாவுக்கு மேற்கே பயணித்தால் நறுமணப்பொருட்கள் இருக்கும் தீவை அடையலாம் என நம்பினார்….

துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு

  சன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர். தமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள்.   இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த…

துலுக்கப்பயலே! – 1: வைகை அனிசு

  பள்ளிப்பருவத்தில் தொடங்கிக் கல்லூரிப்பருவம் வரை என் ஆழ்மனத்தில் தீண்டத்தகாத சொல்லாக இருந்த சொல் ‘துலுக்கப்பயல்’ என்பது. இப்பொழுது நான் பத்திரிக்கைத்துறையில் பணிபுரிந்தாலும் பணித்தோழர்களும் உற்ற நண்பர்களும் நான் இல்லாத இடத்தில் “அந்தத் துலுக்கனை இன்னும் காணோம்” என்று அடையாளப்படுத்தி வருவதை இன்றளவும் கண்டுவருகிறேன். சிறு பருவத்திலேயே இதற்கு விடைகாணும் பொருட்டாக என்னுடைய பாட்டனாரிடம் “முசுலிம்களை ஏன் துலுக்கன் என அழைக்கிறார்கள்” என அடிக்கடிக் கேள்வி கேட்பேன். அவர், விடுதலைப் போராட்ட ஈகையாளி(தியாகி) என்ற முறையில் ஊர், ஊராகச் சென்றவர் என்பதால் துலுக்கக் கவுண்டர்,…

பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – 3

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) ஆய்வகம்   ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தும்போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பேண வேண்டும். அவற்றை ஆய்வகத்தில் சேமித்து வைக்க கூடாது. வகுப்பறை   பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவை அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு அதாவது லூப்ரிகேசன்…

1 2 13