வெருளி நோய்கள் 1466 -1470: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1461 -1465: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1466 -1470 நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் காணாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிண்டெண்டோ காணாட்ட வெருளி.நிண்டெண்டோ நிறுவனக் காணாட்டப் பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் காணாட்ட வெருளிநிண்டெண்டோ(Nintendo) நிறுவனம் மிகுதியான காணாட்டங்களை விற்பனை செய்கிறது. இதனைப் பயன்படுத்தும் பொழுது ஒளிரும் விளக்குகளால் வலிப்பு நோய், மன நோய் முதலானவை ஏற்படுவதாக அஞ்சுகின்றனர். எனவே, நிண்டெண்டோ நிறுவனப் பொருள் மீது அளவுகடந்த பேரச்சம கொள்கின்றனர். நூற்றாண்டு பழமை கண்ட நிண்டெண்டோ நிறுவனம் முதலில் சீட்டுக்கட்டுகள் உருவாக்கத்தில்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்! அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 3. குமுகாய அமைப்பு, 4.பொருளியல் நிலை, 5.மக்கள் வாழ்க்கை நிலை
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 3.குமுகாய அமைப்பு ஐந்தாயிரம் ஆண்டுகட்குமுன், அஃதாவது முக்கழகக் காலங்களில் இன்றுபோல குலப்பிரிவுகள் (சாதி) இல்லை. ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னரே பிர்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதத்தில் சேர விரும்பாத மக்கள் ஐந்தாம் குலம் (சாதி), “பஞ்சமர்”, “தீண்டப்படாதவர்” என அழைக்கபப்ட்டனர். இவர்களுக்கு முன்கூறிய நான்கு பிரிவினர்களுடன் எவ்வகைத் தொடர்பும் இல்லை….
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 1.தமிழ்நாடு ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால் குமரிக்கண்டம் என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே! குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…
கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்
(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது.ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்…
கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்
(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர்…
கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…
கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்! ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…
வெருளி நோய்கள் 742-745: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 741: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 742-745 கருத்தடை உறை குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் காப்புறை வெருளி.காண்டம்(condom) என்னும் சொல் மதிப்பு என்னும் பொருளுடைய காண்டசு(condus) என்பதிலிருந்து வந்தது என்பர் சிலர். சார்லசு இரண்டாம் அரசர் மன்றத்தில் பணியாற்றிய, இதனைக்கண்டு பிடித்த திரு.காண்டம் என்பவரின் பெயரையே சூட்டியுள்ளதாகச் சிலர் கூறுவர்.உறை என்பதே காப்பிற்குத்தானே. எனவே, கருத்தடைக்கான காப்பு உறை என்பதையே சுருக்கமாக உறை எனக் குறிப்பிட்டு உறை வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். உறை வெருளி என்பது மடலுறை வெருளி(Fakelophobia) என்னும் பொருளையும்…
வெருளி நோய்கள் 739-740: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 734-738: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 739-740 காதல் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதல் திரைப்பட வெருளி.காதல் வெருளி உள்ளவர்களுக்குக் காதல் திரைப்பட வெருளி வர வாய்ப்புள்ளது. காதல் காட்சிகள் பார்க்கக்கூடிய வகையில் இல்லை என்று காதல் திரைப்படங்கள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 காதல் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சமே காதல் வெருளி.காதல் என்பது வாழ்க்கையின் வெறுக்கத்தக்க செயல் என எண்ணுவோர், பழமை வாதிகள், சாதி ஆணவக் குடும்பத்தில் சிக்கியுள்ளவர்கள், காதல் ஏமாற்றமான வாழ்க்கையே தரும் என…
கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்
(க௪. தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல் பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன்…
