அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும்.

  எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே!

                        எழுதுக எழுதுக தமிழில் எதையுமே!

                        பேசுக பேசுக நல்ல தமிழிலே!

                        பயிலுக பயிலுக நமது தமிழிலே!

                        மொழியை மறந்தாலோ      

                        வாழ்வை இழப்போமே!

                        வாழ்வை இழந்தாலோ

                        நாமும் இல்லையே!

                        நம் இனமும் இல்லையே!

                         போற்றுவோம் போற்றுவோம் – அன்னைத் தமிழையே!

                        பேணுவோம் பேணுவோம் அருமைத் தமிழையே!

                        நம் உரிமைத் தமிழையே!

                        தமிழை மறந்தால் தமிழினம் அழியும் என்பதை இப்பாடல் மூலம் நம் பிள்ளைகளுக்கு உணர்த்துவோம்.